Sooddram.com
(ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கங்களை ஆக்கியவர்களே பொறுப்பு)
தமிழர்களின் போராட்ட
வாழ்வின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளை வாய்மை வழி நின்று பதியவே
இந்த இணையத்தளம் - உண்மையான வரலாற்றைத் தேடுவோர்களுக்கு இது ஒரு களம்
********************************************************
வைகாசி
18, 2012
என் 'தலைவன்' இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!
அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!
(ஜோர்ஜ் குருஷ்சேவ்)

ஒரு மரணத்தினால் வரும் இழப்பின் வேதனை எங்களுக்குத் தெரியும்! அதிலும்
சம்பந்தமே இல்லாத மனைவியும், மகளும், அப்பாவிக் குழந்தையும் நாய்கள் போலக்
கொல்லப்பட்டு அடையாளமே இல்லாமல், மறைக்கப்பட்ட மிருகத்தனத்தின் கொடுமையும்
எங்களுக்குத் தெரியும்! வாழும் காலத்தில் செய்தது சரியோ, தவறோ,
சரணடைந்தவர்களுக்கு சர்வதேச விதிகளின்படி பாதுகாப்பு அளித்து, பின்னால்
விசாரணைகளுக்கு உட்படுத்தடும் பாரம்பரியம் இல்லாமல், இவர்கள் மிருகத்தனமாகக்
கொல்லப்பட்டதற்கு காரணமான சூத்திரதாரிகள், மனிதத்திற்கு எதிரான, யுத்தக்
குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று
வலியுறுத்தும் அளவுக்கு எங்களுக்கு மனிதாபிமானமும் உண்டு. கடவுள், கர்மம்,
காலம், விதி என்று எதிலெல்லாம் நம்பிக்கையோ. அது அளித்த தண்டனை, பரிசு
என்றெல்லாம் குத்திக் காட்டி துயர் அடைந்தவர்களைப் புண் படுத்தும் அளவுக்கு,
நாங்கள் மனிதம் சிதைத்து வந்தவர்கள் இல்லை. எங்கள் அப்பாவித் தமிழ் மக்கள்
அழியும் போது ஏற்பட்ட அதே மனவேதனை தான்! உங்கள் தலைமையின் அழிவிலும்
எங்களுக்கு உண்டு. தன் பதவி வெறிக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே
நிர்முலமாக்கிய கொடுங்கோலனாக இருந்தாலும், எதிரிக்குக் கூட இப்படியான முடிவு
இருக்கக் கூடாது என்று நினைக்கும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு!
(மேலும்....)
வைகாசி
18, 2012
வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை
இரட்டைப் பதிவு பெற முதலில் இலங்கையில் தம்மை
பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்கள் குறைந்த பட்சம் 5
வருடங்கள் அரசாங் கத்தினால் கண்காணிக்கப் பட உள்ளனர். அதன் பின்னர் அவர்கள்
இரட்டை பிரஜா உரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்ய தகுதி பெறுவர். இதேவேளை
ஏதும் ஒருவருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு நன்மை
கிடைக்கும் என ஜனாதிபதி தீர்மானிக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமலே இரட்டை
பிரஜா உரிமை பெற சலுகை வழங்கப்படும். ஏற்கனவே இரட்டைப் பிரஜா
உரிமையுள்ளவர்களுக்கு இந்த புதிய திட்டத்தினால் எதுவித பாதிப்பும் ஏற்படாது.
(மேலும்....)
வைகாசி
18, 2012
ஆயரின் அரசகாணி அக்கறை
மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டம் போதும்
போதும் என்னும் அளவிற்கு அழிவுகளையும் அவலங்களையும் அள்ளிஅள்ளி
தந்திருக்கிறது. அந்தவிடயத்தில் யுத்தம் சாதி, மத பேதம் ஏதும் காட்டவில்லை.
அதே போல யுத்தம் மொத்தமாகவும் சில்லறையாகவும்
வெவ்வேறு
தவணையடிப்படையில் உயிருடைமைகளை பறித்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குள்
ஏகமனதாக ஒரு கருத்து இருந்ததென்றால் அது, தாயகத்தில் மீள்குடியேறும் தாகம்
ஒன்றுதான்.உயிரிழந்து,
உடமையிழந்து, சொந்த நிலமும் இழந்து போன முஸ்லிம்கள் எங்கெல்லாமோ அலைந்து
தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கே அவர்களை வாஞ்சையுடன்
வரவேற்க ஆயிரம் ஆயிரம் நல்லுள்ளங்கள் காத்திருக்கின்றார்கள். ஆதலால்
அவர்கள் உங்களிடம் இருந்து உபத்திரவம் எதனையும் இனிமேலும்
எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் ஆயர் அவர்களே! ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு
பதமாக உங்களை முஸ்லிம்கள் பார்க்கவும் இல்லை.
(மேலும்....)
வைகாசி
18, 2012
சரத் பொன்சேகாவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்
சிறையிலுள்ள சரத் பொன்சேகாவை விடுவிப்பது
தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த
யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று ஜனாதிபதியின் பேச்சாளர்
பந்துல ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
தலைமையில் அமைச்சரவை அலரி மாளிகையில் நேற்று முன்தினம் கூடியது. இச்சமயம்
ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர்
கூறினார்.
வைகாசி
18, 2012
Sri Lanka calls for Tamils to return
(by noelnadesan)
SRI LANKA has offered Immigration Minister Chris Bowen an escape for
Tamil refugees branded a threat by security agencies and locked in
indefinite detention in Australia - saying they are needed back home.
''Help is required in Sri Lanka now,'' the country's top envoy to
Australia, Thisara Samarasinghe, told The Age. ''Those who have
got a negative assessment, please come back to Sri Lanka. Even if you
have been sent out from the place, you will be treated justifiably and
fairly and you will be permitted to meet up with your families. Of
course, law of the land will prevail.''
(more....)
வைகாசி
18, 2012
சீன கம்யூனிஸ்ட்
கட்சி உயர்மட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகு வருகை தந்துள்ள
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை
நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார குழுக்களுக்கான பிரதிச்
செயலாளர் வேவ் லிகுவான் தலைமையில் 20 பேர் அடங்கிய உயர் மட்ட குழுவினர்
நேற்று மாலை கொழும்பு வந்தடைந்தனர். இவர்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்ததும்
ஜனாதிபதியினை சந்தித்து இருநாட்டு நல்லுறவினை மேலும் வலுப்படுத்தி
மேம்படுத்துதல் உட்பட பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இக்குழுவினர் இன்று (18) காலி துறை முகத்தை நேரில் சென்று பார்வையிடவுள்
ளனர். அதேநேரம் நாளை (19) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான
மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துவரென வெளிவிவகார
அமைச்சு தெரிவித்தது.
வைகாசி
18, 2012
ஆங்கில நாவல் இப்போது
தமிழில் சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது.
(நட்சத்திரன் செவ்விந்தியன்)

தாயகம் ஜோர்ச் குருச்சேவ் ஆங்கிலத்தில்
எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற உண்மைக்கதையை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவல் இப்போது தமிழில்
சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது.
(மே 18 இல் உலகெங்கும் வெளியிடப்படவிருந்த மேற்குறித்த படம் சில நாடுகளின்
தணிக்கை குழுவினரின் சிக்கல் காரணமாக மே 19 ல் வெளிவரவுள்ளது. மே 17ல்
பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்று தாய்லாந்தின் புக்கே நகரில்
காட்டப்பட்ட சிறப்புக் காட்சியைப்பார்த்து புலம்பெயர் திரைப்பட விமர்சனச்
செம்மல் நட்சத்திரன் செவ்விந்தியன் விசேடமாக Facebook க்கு எழுதியது இது)
(மேலும்....)
வைகாசி
18, 2012
இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது
ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ?
(by
vimarisanam -
kavirimainthan )

ராஜபக்சே தலைமையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இந்திய
தூதரை அழைக்கிறார்கள். இந்திய தூதர் – அசோக் கே.காந்தாவும் கலந்து
கொள்கிறார். இந்த விழாவில் ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்க –
ஜனாதிபதியின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியைப் அவமதித்துப் பேசுகிறார்
- ராஜபக்சேயின் தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்க முடியுமா ?
பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேயின் சகோதரருமான கோத்தபய
ராஜபக்சே நான்காவது ஈழப்போரில் ஆற்றினாரே “அரும்பெறும்
செயல்” – அதை பாராட்டி எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம் – இலங்கை ஊடகவியலாளர்
சி.ஏ.சந்திரப்பிரேம எழுதிய – ” கோத்தாவின் போர்
” இந்த புத்தகத்தின்
வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றிருக்கிறது.
தம்பியின் புகழ் பரப்பும் இந்த நூலை
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சே வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
(மேலும்....)
வைகாசி
18, 2012
63 இலங்கையருடன் அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு அகதிப் படகு!

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு 63
இலங்கை அகதிகளுடன் சென்ற படகொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பேர்த்
நகரில் இருந்து 2750 கிலோ மீற்றர் தொலைவில் கொக்கோஸ் தீவு அமைந்துள்ளது.
ஆள்நடமாட்டம் இல்லாத இந்தத் தீவிலேயே அகதிகள் படகு தரையைத் தொட்டுள்ளது.
அகதிகளை ஏற்றிச் சென் றபடகொன்று இவ்வருடத்தில் கரையைத் தட்டிய முதல்
சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் படகில் இருந்த அனைவரும் ஆண்கள். இவர்கள்
அகதிகள் முகாம் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச்
செல்லப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த
வருடத்தில் மாத்திரம் 88 படகுகளில் வந்த 2,946 பேர் அகதி அந்தஸ்து கோரும்
நோக்கில் அவுஸ்திரேலியா வந்துள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வைகாசி
18, 2012
அமெரிக்காவில்
சிறுபான்மை இனத்தவர் அதிகரிப்பு
அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தொடர்ந்தும் பெரும்பான்மையினர் அல்ல என
அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பு சபையை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று
செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர்களான ஹிஸ்பானியர்,
கறுப்பினத்தவர், ஆசியர் மற்றும் ஏனைய கலப்பினத்தவரின் பிறப்பு வீதம் கடந்த
ஓராண்டுக்கு மேலாக 50 வீதத்தை தாண்டி இருப்பதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’
பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான மாற்றத்திற்கு உள்ளாகி இருப்பது
அமெரிக்க வரலாற்றில் இது முதல்முறையாகும்.
வைகாசி
18, 2012
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள்
இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்
அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை
ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்
பட்டுள்ள தம்மை யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோதிலும்
விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள்
தெரிவித்துள்ளனர். தம்மால் பல்வேறு தடவைகளில் இவ்வாறு உண்ணாவிரதப்
போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் அரசியல் வாதிகளின் உறுதிமொழிகளால் அவை
கைவிடப்பட்டன. இருப்பினும் இம்முறை வெறுமனே உறு திமொழிகளால் எம்மை ஏமாற்ற
முயற்சிக் கக் கூடாது, மாறாக எமது விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமென்றும்
தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
வைகாசி
18, 2012
சிரியாவில் ஏற்பட்டுள்ளது மக்கள்
எழுச்சியல்ல, கலகம்;'
- ஜனாதிபதி அசாத்
சிரியாவில் மக்கள் எழுச்சி ஏற்படவில்லை என்றும் கலகம் ஒன்றே
இடம்பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ஐ. நா. கண்காணிப்பாளர்கள் நிலைகொண்டிருக்கும் நிலையிலும் அங்கு
வன்முறைகள் நீடிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்ய
தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். “சிரியாவில்
ஏற்பட்டிருப்பது மக்கள் எழுச்சியல்ல. அது ஒரு கலகம் என்பதில் சிரிய நாட்டு
தலைமை தெளிவாக இருக்கிறது. இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் நிதி
மற்றும் ஆயுதங்களைப் பெற்று நாட்டின் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகி
ன்றனர்” என அஸாத் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்
சிரியாவின் பெரும்பான்மை மக்கள் தமது அரசுக்கே ஆதரவளிக்கின்றமை அண்மைய
தேர்தலில் தெளிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே சிரிய
அரசுக்கு ஈரான் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக ஐ. நா. அறிக்கை ஒன்று
குறிப்பிட்டுள்ளது.
வைகாசி
18, 2012
வீதி விபத்து
மரணங்களை தடுக்க வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட வேண்டும்
எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம்
முடிவடைவதற்கு முன்னர் அனேகமாக ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளின் தாக்
குதலினால் குறைந்தபட்சம் ஓரிருவர் அல்லது பெருந் தொகையினர் கொல்லப்பட்ட
செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளி லும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளிலும்
வெளிவருவதுண்டு. இதனால், பொதுமக்கள் அன்றைய காலகட்டத்தில் எந்த இடத்தில் பய
ங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறுமோ என்ற சந்தேகத்தில் வெளி ப்பிரயாணங்களை
தவிர்த்துக் கொண்டு கூடியவரையில் தங்கள் வீடுக ளிலேயே முடங்கிக்
கிடந்தார்கள்.
(மேலும்....)
வைகாசி
17, 2012
இலங்கைத் தமிழர் பிரச்னை
- ஓர் ஆய்வு
(பகுதி 13)
(அ.ஆனந்தன்)
ஜுலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க
அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று
துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.
அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள
வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது
தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள
மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர்.
ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின்
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன.
பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும்
மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர்.
(மேலும்....)
வைகாசி
17, 2012
தனி ஈழம் சாத்தியமில்லை, கசக்கும் உண்மைகள்
''தனித் தமிழ் ஈழம் அமைந்திட, ஐ.நா மன்றம் வாயிலாக இலங்கையில் வாக்கெடுப்பு
நடத்த வேண்டும்'' என்ற குரல் உலகம் முழுக்க இப்போது ஒலிக்கத்
தொடங்கியிருக்கிறது. 27 ஆண்டுகள் கழித்து, மீண்டும் டெசோ(தமிழ் ஈழ ஆதரவாளர்
அமைப்பு) அமைப்பைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ''வாக்கெடுப்பின்போது,
புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும் அனுமதிக்கவேண்டும். தமிழர் பகுதிகளில்
புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது''
என்று சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் சாத்தியமா? இதற்கு தமிழ்நாட்டு
மக்கள் எவ்வளவு தூரம் ஆதரவு அளிப்பார்கள்? என்ற கேள்விக்கு தமிழகத்தில்
வாக்காளர்கள் இதுவரை ஈழப் பிரச்னையை வைத்து எந்தத் தேர்தலிலும்
வாக்களித்ததில்லை. ஈழத் தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை
ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில்லை. சொல்லப்போனால், இருந்த இடம் தெரியாத
அளவுக்கு இக்கட்சிகளை ஒதுக்கி விடுகிறார்கள். இதற்கு, நாடாளுமன்றத்
தேர்தலில் தோற்கடிக்கபட்ட வைகோவே உதாரணம்.
(மேலும்....)
வைகாசி
17, 2012
யாழ்., மட்டு. அரச அதிபர்கள் நேற்று கடமையேற்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வவுனியா
அரசாங்க அதிபராக நீண்டகாலம் பணியாற்றிய திருமதி பி. எச். எம். சாள்ஸ் நேற்று
புதன்கிழமை மதியம் 11.05 மணிக்கு கடமையேற்றார். நேற்று காலை மாவட்ட செய
லகத்திற்கு வருகை தந்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செய லக ஊழியர்
நலன்புரி சங்கத்தினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில்
இடம் பெற்ற சமய வழிபாடுகளையடு த்து இந்து, முஸ்லிம், பெளத்த, கத்தோலிக்க
சமயத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர் கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை
முன்னர் மட்டு.மாவட்ட அரசாங்க அதிபராக கடமைபுரிந்த சுந்தரம் அருமைநாயகம்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று கடமையேற்றார். இவருக்கு யாழ்.
செயலக அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்த ர்களினால் சிறப்பான
வரவேற்பளிக்கப்பட்டது. முன்னர் யாழ். அரச அதிபராக கடமையாற்றிய திருமதி
இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து சுந்தரம் அருமைநாயகம்
யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைகாசி
17, 2012
கிரீஸில் ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவு, மீண்டும் தேர்தல்
கிரீஸில் கூட்டு அரசொன்றை அமைக்கும் கடைசி முயற்சியும் தோல்வியடைந்ததை
தொடர்ந்து அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. கிரீஸில் அரசொன்றை அமைக்க
நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையும் எந்த
தீர்மானமும் இன்றி தோல்வியடைந்தது. கடந்த 6 ஆம் திகதி கிரீஸில் நடந்த பொதுத்
தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை.
இதில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸில் முன்னெடுக்கப்படும் சிக்கன
நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலானோர் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிணையை
பெறுவதற்காகவே கிரீஸ் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டி ருந்தமை
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரீஸில் கூட்டு அரசொன்றை அமைப்பதற்கு
ஜனாதிபதி கார்லொஸ் பபவ்லிஸ் கடந்த ஒருவாரமாக முயற்சி மேற்கொண்டார். எனினும்
கூட்டு அரசொன்றை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடொன்று
எட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தேர்தலை நடத்த வேண்டி
ஏற்பட்டுள்ளது.
வைகாசி
17, 2012
அமெரிக்காவில்
இலங்கை அரசு தெரிவிப்பு
சர்வதேசம் பரிந்துரைக்கும் தீர்வை விட தேசிய தீர்வே பொருத்தமானது
சர்வதேச சமூகம் பரிந்துரை செய்யும் வகையிலன்றி இலங்கையில் நிரந்தர சமாதானம்
ஸ்திரத்தன்மை செளபாக்கியம் என்பவற்றை தேசிய தீர்வின் மூலமே பெற்றுக்கொள்ள
முடியும் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை
வெற்றிகரமாக தோல்வியுறச் செய்து மூன்று வருடங்களே நிறைவடைந்துள்ள நிலையில்
இலங்கை பாரிய பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதென வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமெரிக்க செனட் சபையினரைச் சந்தித்த போது
தெரிவித் துள்ளார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை
மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அந்நாட்டின் செனட் சபை
உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கையின் தததற்போதைய நிலைமைகள் குறித்தும்,
எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் உருவாகியுள்ள வாய்ப்புகள் தொட்ரபில் அரசாங்கம்
மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன் அதற்கேற்ப செயற்பாடுகள் தேசிய
ரீதியானதாக அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இந்த
செயற்பாடுகள் சர்வதேச மற்றும் பலமுள்ள நாடுகளின் அனுமதியுடன் செயற்படுத்த
வேண்டியதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்டு பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளைத் தற்போது நடைமுறைப்படுத்த
ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அது முறையாக
நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதில் அரசாங்கம் விசேட கவனத்தைச்
செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வைகாசி
17, 2012
யூரோ நிதி நெருக்கடி
ஒன்றிணைந்து
செயற்பட ஜெர்மனி - பிரான்ஸ் இணக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரான்கொயிஸ் ஹொலன்டே யூரோ நிதி
நெருக்கடிக்கு தீர்வுகாண ஜெர்மனியுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற ஹொலன்டே பதவியேற்ற கையோடு
ஜெர்மனிக்கு விரைந்தார். அங்கு அவர் ஜெர்மனி அதிபர் அன்ஜலா மெர்கலை
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கிரீஸ் மீதான கடன் பிணையை
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கினர்.
அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி இது தொடர்பில் விளக்கும் யூரோ மாநாட்டை
கூட்டவும் தீர்மானிக்கப் பட்டது. முன்னதாக ஹொலன்டே தனது தேர்தல்
பிரசாரத்தில் யூரோ நாடுகளின் பட்ஜட் கட்டுப்பாட்டு திட்டத்தை மீள்பரிசீலனை
செய்வது குறித்து தாம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள தாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதற்கு ஜெர்மனி அதிபர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யூரோ மண்டல நாடுகளின் நிதி நெருக்கடியில் தீர்மானமிக்க சக்திகளாக பிரான்ஸ்,
ஜெர்மனி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைகாசி
17, 2012
பொலிஸ், பொதுமக்கள் நல்லுறவு இன்று வலுவடைந்து வருகிறது
பொலிஸ்
அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, இவை
குறித்து அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு
காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள மாட் டோம் என்று
தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ விரும்பாமலோ இனப்பிரச்சினைக்கான தீர்வை
காலதாமதப்படுத்துவதற்கான இந்த நிலைப் பாட்டில் இருந்து சற்றேனும் விட்டுக்
கொடுக்க தயாராக இல்லையென்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு
கட்சி பிளவுபடுவதற்கு அக்கட்சியின் பிரதான தலைவர்க ளுக்கிடையில்
இருந்துவரும் கொள்கை அடிப்படையிலான கோபதாபங்க ளும் ஒரு காரணம். அது போன்று
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரார் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண
அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது
இன்னொரு சாரார் நாம் எமது கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாதென்று
வாதாடுகிறார்கள்.
(மேலும்....)
வைகாசி
17, 2012
ஈரானிடமிருந்து
மசகு எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா முடிவு
ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா
முடிவுசெய்துள்ளது. கடந்த வாரம் மூன்றுநாள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு
வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஈரானிடமிருந்து
மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று
வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் மசகு
எண்ணெய்யை 11 சதவீதத்துக்கும் மேல் குறைத்து 15.5 மில்லியன் தொன் எண்ணெய்
மட்டும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாநிலங்களவையில்
பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் எழுத்து மூலம் அளித்த
பதிலில் இதைத் தெரிவித்தார். ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி
செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் பொருளாதாரத் தடையை சந்திக்க நேரி
டும் என்றும் உலக நாடுகளை அமெரிக்கா எச்சரித்து வருகிறது. தற் போது
இந்தியாவும் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பணிந்து ஈரானி டமிருந்து மசகு
எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துள்ளது. இப்படி மசகு எண்ணெய் இறக்குமதியை
மத்திய அரசு குறைத்தால், ஏற்கனவே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும்
பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயரக் கூடும் என்று பொருளாதார
வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைகாசி
17, 2012
யாழில் பொலிஸார் இரவில் ரோந்து நடவடிக்கை: 22 பேர் கைது
யாழ் மாவட்டப் பொலிஸார் இரவு நேரத்தில்
மேற்கொண்டுவரும் ரோந்து நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்றத்தினால் பிடியானை
பிறப்பிக்கப்பட்டவர்களும் மற்றும் இரவு நேரத்தில் போதிய காரணங்கள் இன்றி
நடமாடியவர்களும் கடந்த 6 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு
வார காலத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் ஸ்ரீ குகணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
முகமாக யாழ். மாவட்டப் பொலிஸ் நிலையங்கள் தமது பகுதிகளில் இரவு வேளைகளில வட
மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமின் டி சில்வாவின் பணிப்புரைக்கு ஏற்ப
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இரவு
ரோந்து சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்தில் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட சந்தேக நபாகள் 12 பேரும் போதிய காரணங்கள்
இன்றியும் தம்மை அடையாளப்படுத்த முடியாதவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 22
பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸாரால் 4 பேரும் சாவகச்சேரிப்
பொலிஸாரால் 2 பேரும் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் 8 பேரும் தெல்லிப்பழை
பொலிஸாரால் 3 பேரும் பருத்தித்துறை பொலிஸாரால் 7 பேரும் நெல்லியடி
பொலிஸாரால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
___
வைகாசி
17, 2012
அமெரிக்க நெருக்கடிக்கு அடிபணியும் அவலம்
அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
ஹிலாரி கிளிண்டன், ஈரானிலிருந்து மேற்கொள் ளும் எண்ணெய் இறக்குமதியை
குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். அவ்வாறு
செய்யாவிட்டால் அமெரிக்கத் தரப்பி லிருந்து இந்தியாவுக்குத் தரப்படும்
நிதியுதவி திட்டங்கள் வெட்டப்படும் என்றும் கோடிட்டுக் காட்டினார்.
அமெரிக்காவின் மிரட்டலை ஏற்காத சில ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா நிதி
வெட்டு மூலம் அண்மைக் காலங்களில் தண் டனை வழங்கியுள்ளது. கடும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கி யுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க
ஊடுருவலைத் தீவிரப்படுத்தி வரு கிறது. இதற்காக நேட்டோ ராணுவ அமைப்பை ஒரு
கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. மேற்கு ஆசியப் பகுதியில் பெரும் அளவில்
எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட ஒரே நாடான ஈரான் அமெரிக்காவின் முக்கிய
இலக்காக உள்ளது.(மேலும்....)
வைகாசி
16, 2012
முஸ்லிம்கள் தாக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் கூட்டமைப்பும் கருணாநிதியும்
கண்டிக்காதது ஏன்?
மாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில்
முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே, “சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம்
நடைபெற்ற பொழுது” எனக் குறிப்பிட்டார். அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
தாம் ஆயுதம் தூக்கி னார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருக் கின்றார்கள். அத்துடன்
“ஆயிரக்கணக் கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக், கிழக்கிலுள்ள தமது வதி
விடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.
“ஏனையவர்கள்” என்று யாரைக் குறிப்பிட்டீர்கள்? அவர்கள் ஆந்திரப்
பிரதேசத்தவர்களா, கன்னடப் பிரதேசத்தவர்களா? ஏன் உங்களுக்கு “முஸ்லிம்கள்”
எனக் குறிப்பிடுவதற் குக் கூச்சம்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 20
ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து எழுபத்தை யாயிரம் முஸ்லிம்கள்
விரட்டப்பட்டார்கள். 75 ஆயிரம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இது தங்கள் தாயகம் என்றும் அதில் தாங்களே ஆட்சி நடத்துவோம் என்றும் அவர்கள்
கூறினார்கள். எங்களுடைய முஸ்லிம்களும் அங்கிருந்தார்கள். மோசமான உடை
அணிந்திருந்த அவர்கள் தங்களால் எடுத்துக் கொள் ளக்கூடிய உடைமைகளை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இந்தக் கதை உங்களுக்கு நன்கு தெரியும்.
இது இவ்விதம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்காக கண்டனத்தையோ அந்த
மக்களுக்காக கவலையையோ தெரிவிக்கவில்லை.
(மேலும்.....)
வைகாசி
16, 2012
பிரான்ஸ், கிரீஸ் தேர்தல் உணர்த்துவது...
பிரான்சிலும் கிரீஸிலும் நடைபெற்ற தேர் தல்களில் முடிவுகள் அதிர்ச்சியை
ஒன்றும் கொண்டுவரவில்லை. உக்கிர மான உலகப் பொருளாதார நெருக்கடி மக் கள் மீது
சொல் லொண்ணா துன்பத்தைத் திணித்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து
மீள்வதற்காக உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதிமூலதன மும் கடந்த சில
ஆண்டுகளாக எடுத்து வந்த நடவடிக் கைகளுக்கு எதிராக மக்கள் கிளர் ச்சிகள்
மிகவும் விரிவடைந்து வந்ததைப் பார்த் தோம். பொருளாதாரநெருக்கடியிலிருந்து
மீள்வதற்காக அவை மேற்கொண்ட நட வடிக்கைகள் ஒவ்வொன்றும் புதிய நெருக்கடிகளை
உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடு மையான பாதிப்புகளை
உருவாக்கின. கடைசியாக அவை மேற்கொண்ட முயற் சிகளில் முக்கியமானது ‘‘சிக்கன
நட வடிக்கைகள்’’ (`யரளவநசவைல அநயளரசநள’) என்ற பெயரில் மக்களுக்கு அளித்து
வந்த நலத்திட்டங்கள் பலவற்றை நீக்கியதாகும். இதனால் மக்களின் வாழ் நிலை
மிகவும் மோசமாக சரிந்தது. இவை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது
இயற்கையாகவே கோபமடைய வைத்தது.
(மேலும்.....)
வைகாசி
16, 2012
பின்னணியில் சில திரைமறைவு சக்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற
உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன்
2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான
வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்
தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின்
பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது
வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி இராசநாயகத்தை பதவியில்
இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான
சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி
இராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால்
இராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின்
அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004
அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு
அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக்
குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து
கொண்டார்.
(மேலும்.....)
வைகாசி
16, 2012
குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை
படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.1985
ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில்
சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை
செய்யப்பட்ட நாள். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின்
குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை
கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும்
கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்
காப்பாற்றப்பட்டனர்.
(மேலும்.....)
வைகாசி
16, 2012
இஸ்ரேல்
உளவாளிக்கு ஈரானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்த
குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் அணு விஞ்ஞானியான மசூத் அலி மொஹமதி கடந்த 2010
ஆம் ஆண்டு ஜனவரியில் அவரது வீட்டுக்கருகில் குண்டுத் தாக்குதலில்
கொல்லப்பட்டார். இவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24
வயதான மஜித் ஜமாலி பாஷி என்பவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக
ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பாஷி இஸ்ரேலின் உளவுப்
பிரிவான மொஸாட்டிற்கும் உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பாஷி,
மேற்படி அணு விஞ்ஞானியை கொல்ல மொஸாட்டிடம் இருந்து 120,000 டொலர்களை
வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இது குறித்து எந்த
விளக்கமும் அளிக்கவில்லை. மசூத் அலி மொஹமதி தெஹ்ரான் பல்கலைக்க ழகத்தின் அணு
பெளதீ கவியல் விரிவுரையாளர் ஆவார். ஈரான் அணு விஞ்ஞானிகள் தொடர்ச் சியாக
தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது அணுச்
செயற்பாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக
ஈரான் குற்றம்சாட்டுகிறது. தூக்குத் தண்டனைக்கு உள்ளான பாஷி கடந்த ஜனவரியில்
ஈரான் தொலைக்காட்சியில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதில் உளவுச்
செயற்பாடுகள் குறித்து தகவல் அளித்ததோடு அணுவிஞ்ஞானியை கொலை செய்வதில்
தொடர்பு பட்டிருந்ததாகவும் ஒப்புதல் அளித்தார்.
வைகாசி
16, 2012
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து
கண்டனக் கருத்தரங்கம்
ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு
வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில்
ஹிட்லர் , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய பாசிசத்தின்
ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஓன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு
நாடளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது, மூன்று அரசின்
தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது, நான்கு
தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காக பாடுபடும் ஜனநாயக
அமைப்புகள் ஒடுக்கப்படுவது, ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல் வலை
நெறிக்கப்படுவது.
பாசிசத்தின் இந்த ஐந்து அம்சங்களும் சிறிய பெரிய அளவுகளில் நமது நாட்டில்
தலைதூக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. பாரளமன்றத்தின் மாண்பும், மரபும்
எவ்வாறு சீரழிந்து கொண்டுள்ளது என்பதை நிறைய வார்த்தைகளில் விளக்கத்
தேவையில்லை.
(மேலும்.....)
வைகாசி
16, 2012
எழுத்தாளர் விழா 2012
- அவுஸ்திரேலியா

வைகாசி
16, 2012
‘பா’ பட குழந்தை நட்சத்திரம் நேபாள விமான விபத்தில் பலி

நேபாளில் நேற்றுமுன் தினம் காலை நடந்த விமான விப த்தில் அமி தாபின் “பா”
படத்தில் நடி த்த குழந்தை நட்சத்திரம் தருணி சச் தேவ் பலியா னார். ரஸ்னா
விளம்பரம் உட்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி
சத்தேவ் (14). அமிதாப் பச்சன் நடித்த ‘பா’ படத்தில் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும்
பிரியாமணியுடன் வெள்ளி நட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில்
நடித்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடி வினா
நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயாரும் நேபாள தலைநகர்
காத்மண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமான ஜோம்சோமுக்கு சிறிய ரக
விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 21 பேர் இருந்தனர். நேற்று
முன்தினம் காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது
அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது
தாயும் பலியாகினர்.
வைகாசி
16, 2012
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசு
அக்கறை -
ஐ.தே.க.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உண்மையான அக்கறை அரசாங்கத்திற்கு
இருப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஐ. தே. க. சிரேஷ்ட எம்.பியுமான ஜோன்
அமரதுங்க கூறியுள்ளார். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடங்கலான ஐ.
தே. க. தூதுக் குழு நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இந்த
சந்திப்பில் ஜோன் அமரதுங்கவும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பு குறித்து
பி. பி. சி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ஜோன் அமரதுங்க; இந்தப்
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு உண்மையான தேவை உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவு குழுவுக்கு அழைத்து வர ஐ. தே.
க. ஒத்துழைக்க வேண்டுமென இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி கோரினார். இரு
பிரதான கட்சிகளும் இணைந்து ஏனைய கட்சிகளை தெரிவுக் குழுவுக்கு அழைத்துவர
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தாம் முன்
வைக்கும் விடயங்களை அரசாங்கம் ஏற்குமானால் த. தே. கூட்டமைப்பை தெரிவுக்
குழுவுக்கு அழைத்துவர வாய்ப்பாக அமையும் என ஐ. தே. க. சுட்டிக்காட்டியது.
வைகாசி
16, 2012
2 ஜி ஊழல் வழக்கு
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு பிணை
2 ஜி ஊழல் வழக்கில் கைதான இந் திய முன்னாள் தொலைத் தொடர் புத்துறை அமைச்சர்
ஆ. ராசாவுக்கு நேற்றுப் பிணை வழங்கப்பட்டது. இதையடுத்த திகார்
சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 2ஜி ஊழல் வழக்கில் ஆ. ராசா
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்
அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க எம். பி.
கனிமொழி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் 12 பேர் பிணையில் விடுதலையாகி வெளியே உள்ளனர். மொரிசியஸ் நாட்டில்
உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ்
டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. இந்நிலையில் ராசாவை
விடுதலை செய்தால் அவர் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார். இருதரப்பு
வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நேற்று ராசாவுக்கு பிணை வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
இதையடுத்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு டெல்லி திகார்
சிறையிலிருந்து ராசா விடுதலையாகிறார்.
வைகாசி
16, 2012
சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம் -
ஜனாதிபதி
தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை
ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார். “சிங்களவர்களாக
இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான
இனவாதத்தையும் நாம் நிராகரி க்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும்
தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார். இலங்கையின்
முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம்
சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள்,
பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள்
தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி
கேட்டுக்கொண்டார். இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர்
இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான்
பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வைகாசி
16, 2012
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு!
புலி பயங்கரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட
மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான, 146 பௌத்த பக்தர்களை அவர்களது புனித்
தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி விகாரையில் வைத்து
கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்தின் 27 ஆவது ஆண்டுநிறைவு இன்றாகும்.
1985 ஆம் ஆண்டு மே 14 அம் திகதி நிகழ்ந்த இக் கொடூர சம்பவமானது, முழு
நாட்டையும், முழு உலகத்தாரையும் திகைக்கவைத்த ஒரு சம்பவமாகும். சிறுவர்கள்,
பெண்கள் மற்றும் மதகுருக்கள் என பாரபட்சம் பாராமல் இப் பயங்கரவாதிகள்
அனைவரையும் கொண்றுகுவித்தனர். பின்னர் இச் சம்பவமானது புலிபயங்கரவாத
அமைப்பின் தலைவரான பிரபாகரனின் தந்திர உத்தியாகும் என்பது தெரியவந்தது.
ஏனெனில் இதன் மூலம் அப்பாவி தமிழ் மக்கள் மீது இனவாத வெறுப்பை ஏற்படுத்தி
இனக் கலவரத்தை தூண்டுவதே பிரபாகரனின் பின்னணி நோக்காக இருந்தது.
புலிபயங்கரவாதிகள் இதன் போது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.
இதில் 85க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமும் அமைந்தனர். புனித தலதா மாளிகை
மற்றும் ஸ்ரீ மஹா போதி விகாரை ஆகிய பௌத்தர்களின் மிக முக்கிய
புனித்தளங்களில் ஒன்றாகும்.
வைகாசி
16, 2012
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தீவிரவாத போக்குடன்
உள்ளனர் - கே.துரைரட்ணசிங்கம்!
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தீவிரவாத போக்குடன் உள்ளதாக தமிழ்தேசியக்
கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம்
தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை
இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 26 ஆவது ஞாபகார்த்த
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து
கொண்டனர்.
வைகாசி
15, 2012
புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைதுசெய்யப்பட்ட இருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை

புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
கைதுசெய்யப்பட்ட இருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட கனடியரான ரமணன்
மயில்வாகனம் மற்றும் அமெரிக்கரான கருணாகரன் கந்தசாமி ஆகியோர் விடுதலை
செய்யப்பட்டதை அமெரிக்க நீதித்துறை குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்காவின் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம்
ரமணன் மயில்வாகனம் திங்கட்கிழமையும் கருணாகரன் கந்தசாமி கடந்த
வெள்ளிக்கிழமையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
(மேலும்.....)
வைகாசி
15, 2012
தெரிவுக்குழுவுக்கு ஆதரவு
ஐ.தே.க., தமிழ் தேசிக் கூட்டமைப்பும்
கலந்துகொள்ளும்?
நாடாளுமன்ற தெரிவுக் குழுவை பயனுள்ள
கட்டமைப்பாக்குவதற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி
தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்
கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த
நிலைப்பாட்டை வெளியிட்டார். தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் தமது முழு
அர்ப்பணிப்பை செலுத்துமாயின், எதிர்கட்சியினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும்,
ஆதரவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க
குறிப்பிட்டார். எதிர்வரும், ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்திற்கு
எதிராக நாடளாவிய ரீதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக
எதிர்கட்சி அறிவித்துள்ளது. எதிர்கட்சித் தரப்பில் உள்ளடங்கும் அரசியல்
தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்
பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. தனது
இரு தெரிவுக்குழு உறுப்பினர்களின் இடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு
விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் ஐதே கட்சி அறிவித்துள்ளது.
வைகாசி
15, 2012
இலங்கைத் தமிழர் பிரச்னை
- ஓர் ஆய்வு
(பகுதி 12)
(அ.ஆனந்தன்)
இந்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின்
காரணமாகவும் இலங்கையை அடுத்தடுத்து ஆண்ட கட்சிகள் தமிழர் பிரச்னையை
ஓரளவேனும் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ்
இளைஞர்களின் மனதில் ஒரு கடுமையான வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நின்றது.
தமிழர் விடுதலை முன்னணி போன்ற நாடாளுமன்றவாத கட்சிகள் கடைபிடித்த சிங்கள
ஆளும் வர்க்கத்துடனான சமரசப்போக்கு அவர்களுக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே
அவர்களது குட்டி முதலாளித்துவத் தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை உரியவிதத்தில்
பிரதிபலித்த பல இளைஞர் அமைப்புகள் உருவாயின. அவற்றில் மிக முக்கியமானது "பிளாட்'
என்ற அமைப்பாகும். அந்த அமைப்புகள் தமிழ் உரிமைக்காக ஒருபுறம் போர்க்குணம்
மிக்க போராட்டங்களை நடத்தியதோடு அப்பாவி தமிழ் மக்கள் இராணுவத்தால்
தாக்கப்படும் போது அதனை எதிர்த்து தாக்கவும் செய்தனர். இந்த போக்குகள் இதை
ஒத்த வேறுபல அமைப்புகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.
(மேலும்.....)
வைகாசி
15, 2012
தெரிவுக்குழு பற்றிய கூட்டமைப்பின் அறிவிப்பு சாதகமான சமிக்ஞை
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில்
பங்குகொள்வதற்குத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருப்பது
சாதகமானதொரு சமிக்ஞை. இதனை வரவேற்பதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண
தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில்
நிபந்தனைகளுடன் கலந்துகொள்வதற்குத் தயார் எனத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கூறியிருந்தார். கூட்டமைப்பின் இந்த அறிவிப்புக் குறித்து
கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண, இந்த அறிவிப்பு நல்லதொரு
சமிக்ஞை. அவர்கள் பாராளு மன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வோம் எனக்
கூறியிருப்பது சாதகமானது. இதனை நான் வரவேற்கின்றேன்.
(மேலும்.....)
வைகாசி
15, 2012
President - Ranil agree on formula to persuade TNA
(By Rasika Jayakody)
Before the crucial talks between Foreign Minister G.L. Pieris and US
Secretary of State Hilary Clinton in Washington, the Government held
discussions with the UNP yesterday over the Parliamentary Select
Committee (PSC) on the National Question. The Government has promised
the UNP that it will walk the extra mile to get the TNA to participate
in the PSC. The United National Party has urged the President to form
the PSC with the support of the TNA. The UNP has also stated that the
Government should be ready to compromise on its rigid stance in an
effort to get the TNA to participate in the PSC. The UNP has made this
request when a delegation led by Party Leader Ranil Wickremesinghe met
President Mahinda Rajapaksa at Temple Trees yesterday morning to discuss
the proposed Parliamentary Select Committee. Several senior UNP
Parliamentarians namely Tissa Attanayake, John Amaratunge, Joseph
Michael Perera, Lakshman Kiriella and Ravi Karunanayake took part in the
discussions with the President on behalf of the UNP.
(more...)
வைகாசி
15, 2012
சீ-4
6550 கிலோ வெடி மருந்து புதுக்குடியிருப்பில் மீட்பு
புதுக்குடியிருப்பு மற்றும் இரணமடு
பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6550 கிலோ எடையுள்ள சீ-4 ரக அதி
சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியிலிருந்து இதுவரை காலமும்
மீட்டெடுக்கப்பட்ட சீ-4 ரக வெடி மருந்துகளில் அதி கூடிய தொகை இதுவாகும்
என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
(மேலும்.....)
வைகாசி
15, 2012
யாழ். குருநகர் தொடர்மாடி புனரமைப்புக்கு ரூ.70 மில்.
யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி
வீடமைப்புத்திட்டத்தினை நவீனமயப்படுத்தி மீள நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு
அமைச்சு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 1994ம் ஆண்டு யாழ் குருநகர்
தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக் கப்பட்டு 18 வருடங்கள் ஆகியும் தற்
பொழுது மக்கள் வாழ முடியாத நிலை யில் உள்ளனர். இத் திட்டத்தில் 160
வீடுகளில் 160 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவ் வீடமைப்புத்திட்டம் 8
வீடமைப்புத் தொகுதிகளாக உள்ளன. கடந்த காலத்தில் நடைபெற்ற சமரின் போது இவ்
வீடமைப்புத் திட்டங்கள் கட்டடங்கள் அழிந்துள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்
அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்நகருக்கு சென்று இவ் வீடமைப்புத் திட்டத்தினை
அமைச்சின் அதிகாரிகளுடன் பார்வையிட்டார். இவ் விஜயத்தின்போது தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் மற்றும்
பொறியியலாளர்களுக்கு இவ் வீடமைப்புத் திட்டத்தினை மீள் புனர்நிர்மாணம்
செய்வதற்காக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் படி அதிகாரிகளிடம்வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
வைகாசி
15, 2012
Sarath Fonseka will be released soon, says Rajapaksa
Jailed former Army Commander of Sri
Lanka Sarath Fonseka, who led the Eelam war IV against the Tamil Tigers
and helped win it, is set to be released shortly. “We will release him
soon,” Sri Lankan President Mahinda Rajapaksa told The Hindu on
the sidelines of a function organised to launch a book, Gota's War, here
on Monday. Mr. Rajapaksa said the person who tried hard to secure Gen.
Fonseka's release, Member of Parliament Tiran Alles, was out of the
country. Mr. Alles was in the U.K. and he was cutting short his visit to
reach Colombo on Tuesday, a source said. “He [Mr. Alles] has to get the
credit for the release [of Gen. Fonseka],” the President said.
(more....)
வைகாசி
15, 2012
தி.மு.க. -
அ.தி.மு.க. இணையாதது ஏன்?
தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளும் இணைய முடியாமல் போனதற்கான காரணங்களை
தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார். 12.9.1979 இல் பிஜு பட்நாயக்க
சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்தார். அப்போது நாங்கள் நீண்ட நேரம்
விவாதித்த பிறகு தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளும் இணைந்திட சில
நிபந்தனைகளை நான் சொன்னேன். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. பெயரில்தான்
இயங்க வேண்டும். கட்சிக் கொடியில் அண்ணா படம் பொறிப்பதில் எங்களுக்கு எந்த
மறுப்பும் இல்லை. முதல்வராக எம்.ஜி.ஆர். நீடிக்கலாம். இரண்டு கட்சிகளும்
இணைவதால் தி.மு.க.வில் இப்போதுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாருக்கும்
அமைச்சர் பதவி தேவையில்லை. இரு கட்சிகளும் இணைந்த பிறகு உரிய நேரத்தில்
கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப்
பொறுப்புகள் குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தேன்.
(மேலும்.....)
வைகாசி
15, 2012
Five Tamil parties drop ITAK umbrella for TNA
(By Franklin R. Satyapalan)
The five Tamil Political Parties ITAK, TULF, TELO, EPRLF and PLOTE have
agreed, as a matter of policy, to function under the Tamil National
Alliance (TNA) umbrella which is to be registered shortly with the
Elections Secretariat, Leader of PLOTE Dharmalingam Siddharthan said
yesterday.
Hitherto, they had contested under Illankai Tamil Arasu Katchi which was
the breakaway branch of the former Federal Party.
Former Parliamentarian Siddharthan said that they had discussed the
delay on the part of the government to implement the LLRC
recommendations, the resettlement of the IDPs, the prevailing political
situation in the country and the possibilities of the government
announcing early provincial council elections in the Eastern Province.
He said that the representatives of the five Tamil political parties,
presided over by TNA leader MP R. Sampanthan, met at the TNA
headquarters at Retreat Road in Bambalapitiya and deliberated at length
before arriving at the decision to form the Alliance last Friday.
"The five Tamil political parties had united and been together under the
TNA banner in the past and had contested elections successfully, but
have had their differences which surface once in a way as in the case of
any other Alliance," he said.
Those who were present were TULF leader V. Anandasangari, ITAK MP M.
Saravanabavan, EPRLF Secretary General and MP Suresh Premachandran,
EPRLF MP Shivashakthi Anathan, TELO MP Nogarajalingam alias Henry, and
PLOTE leader Dharmalingam Siddharthan.
It was agreed that the General Secretaries of the respective Tamil
Political Parties were to meet regularly to work out a common working
programme for members of the Alliance.
வைகாசி
14, 2012
நல்லிணக்க ஆணைக்குழு
பரிந்துரைகளை
நிறைவேற்ற மேலதிக உதவிக்குழு அவசியம் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தேசிய
கொள்கைகளுக்கு ஏற்ப செயற்படுத்த பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின் மூலமே
முடியும் என தெரிவித்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இப் பரிந்துரைகளை
நிறைவேற்ற மேலதிக உதவி குழுவை நியமிக்குமாறும் யோசனை ஒன்றையும்
முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
பொதுச்செயலாளரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.(மேலும்.....)
வைகாசி
14, 2012
குடும்ப சூழல் மாற்றமடைவதே முதியோரின் மறதி நோய்க்கான காரணமாகும்
(ஆர். ஜி. ஜெகதீஷ்)
கமல்ஹாசனின் "உன்னைப்போல ஒருவன்" படத்தில் "இந்தியாவின் தேசிய வியாதி மறதி"
என்ற வசனம் இடம்பெறும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வசனம்,
நிஜத்தில் மற்றொரு கோணத்தில் உண்மையாகும் வாய்ப்பு மெல்ல மெல்ல அதிகரித்து
வருகிறது. "டிமென்ஷியா" என அறியப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில்
வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது, உலகரங்கில் அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியுள்ளது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வர
வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்கான மருத்துவ முறைகள் பெரிதளவில் கண்டு
பிடிக்கவில்லை. ஆனால், இந்த நோய்க்கான மருந்துகள் ஒவ்வொருவரின் மனதிலும்,
சமுதாயத்தையும் சார்ந்தே உள்ளது.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
இலங்கை
இந்திய மீனவர் பிரச்சினை நட்புறவுடன் தீர்த்து வைக்கப்படும்
யாழ்ப்பாணத்து தமிழ் மீனவர்களுக்கு இந்திய
மீனவர்கள் இழை க்கும் இன்னல்களையும் அவர்களின் மீன் வளத்தை சூறையா டும்
சட்டவிரோத செயற்பாடுகளையும் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கமும்
தமிழ்நாட்டு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ. பி. டி. பி.
அமைப்பின் பொதுச் செயலாளரும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்
முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்த கருத்துக்கு
இந்தியா வில் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதற்கான அறிகுறிகள் இப்
போது தென்படுகின்றன.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
நில உரிமை வழிகாட்டல் நடைமுறைக்கு வருமா?
ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு முக்கியமான ஆவ ணத்திற்கு ஒப்புதல் வழங்கி
ஏற்றுள்ளது. நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிரான வழிமுறைகளை வரையறுக்கும்
ஆவணம் அது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வன நிலங்கள் உட்பட விவசாய
நிலங்களும் இதர நிலங்களும் சுயநல நோக்கங்களுக் காகக் கைப்பற்றப்படுவது,
சமுதாயத்தில் அமைதி யின்மைக்கும், ஏற்றத்தாழ்வுகள் விரிவடைவதற்கும்
இட்டுச்செல்கிறது. ஆகவேதான், பல்வேறு அமைப் புகளும் இந்த 40 பக்க ஆவணத்தை
வரவேற் றுள்ளன. அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட குழி பறித்து,
பெருந்தொழில் நிறுவனங்களும் அரசாங் கங்களும் எளிய மக்களின் வாழ்வாதாரமான
நிலங் களைக் கைப்பற்றுகின்றன. அதற்கேற்ப மன சாட்சியே இல்லாமல் நாட்டின்
சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக, உலகம்
முழுவதும் மனித நேய அமைப்புகள் நடத்தி வந்த போராட்டங்களின் பலனாகவே இந்த
ஆவணம் நிறைவேற்றப்பட் டிருக்கிறது.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்ததாக
கூறுகின்றனர்
(பிறைசூடி இரயாகரன்)
இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கியவர்கள், இயங்குபவர்கள்,
தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தீப்பொறி அமைப்பையும், பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும்
புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம்
காட்டிக்கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த
அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக்
கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இதுதான். "மே18" காரர் கனடாவில்
நடந்த கூட்டம் ஒன்றில், தம்மை "தமிழரங்கம்" காட்டிக் கொடுத்ததாகக் கூறி,
அங்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கருத்துச்
சொல்லும் உரிமையை தடுத்து நிறுத்தினர். அங்கு என்ன நடந்தது என்பதை
தெரிந்துகொள்ள "கனடாவில் "முன்னேறிய பிரிவினரின்" ஜனநாயக மறுப்பு! "என்ற
கட்டுரையைப் படியுங்கள்.(மேலும்.....)
வைகாசி
14, 2012
கற்கால முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்! ஐரோப்பாவில் கொந்தளிப்பு
பொருளாதார நெருக் கடிக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தினம் உலகம் முழுவதும்
பல்வேறு நாடு களில் மக்களின் பெருந் திரள் பேரணியோடு அனு சரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஐரோப் பிய நாடுகளில் மிகவும் எழுச்சியோடு நடத்தப்பட்
டிருக்கிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுக்கல்
உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக் கான மக்கள் பேரணிகளில் கலந்து
கொண்டிருக்கிறார் கள். லண்டனில் நடந்த பேர ணியில் கற்கால முதலாளித் துவத்தை
வீழ்த்துவோம் என்று எழுதப்பட்ட அட் டைகளை ஏந்திக்கொண்டு மக்கள் வலம்
வந்தனர். இரு நாட்களுக்கு முன்னதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட 24 மணிநேர வேலை
நிறுத் தம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்ததால், உற்சாகத் துடன் மக்கள் இதில்
பங் கேற்றனர்.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
6 வது நாளாகத் தொடரும்
ஏர் இந்தியா
விமானிகள் போராட்டம்
ஏர் இந்தியா நிறுவன விமானிகள் போராட்டம்
6வது நாளாகத் தொடர்ந்து நடப்பதால் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானிகள் வேலைக்கு வரவில்லை. எனவே, நாங்கள் 20 விமான சேவையை ரத்து
செய்துள்ளோம் என்று ஏர் இந்தியா அதிகாரியொருவர் தெரிவித்தார். 20
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான
நிலையங்களில் தவித்தனர். மேலும், விமானக்கட்டணங்கள் திருப்பி
அளிக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர். போராட்டத்தில்
ஈடுபட்ட 71 விமானிகளை ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
மேலும், இந்திய விமானிகள் சங்கத்தின் செயல் அலுவலர்கள் 11 பேரின் விமானி
உரிமங்களை ரத்து செய்ய முயன்று வருகிறது. இந்திய விமானிகள் சங்கத்தைச்
சேர்ந்த 11 விமானிகளுக்கு, பணிக்கு வராததற்கு விளக்கமளிக்குமாறு இந்திய
விமானப் போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய விமானிகள்
சங்கத்தைச் சேர்ந்த 200 விமானிகள் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட்டால் விமானிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தத் தயாராக இருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங்
தெரிவித்தார்.
வைகாசி
14, 2012
ஆப்கான் சமாதான கவுன்சில் உறுப்பினர் சுட்டுக் கொலை
ஆப்கான் சமாதானக் கவுன்சிலின் உயர்மட்ட
உறுப்பினரான அர்சலா ரஹ்மானி காபூலில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இது
நீண்ட பல ஆண்டுகளாக அமைதித் தீர்வுக்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில்
பின்னடவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தலிபான் அமைப்பில் முக்கிய
நபராக இருந்து பின்னர் ஆப்கான் சமாதான தூதுவராக மாறிய அர்சலா ரஹ்மானி அவரது
வாகனத்தில் சென்ற போது மற்றொரு வாகனத்தில் வந்த ஒருவர் அவர் மீது
துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காபூல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுத்
தலைவர் முகமது ஜாகிர் தெரிவித்தார். எனினும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு
தாங்கள் பொறுப்பல்ல என்று தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை நடைபெற்ற தலிபான் ஆட்சியில்
ரஹ்மானி உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தலிபான்களின்
வீழ்ச்சி க்குப் பின்னர் ஜனாதிபதி கர்சாயின் கட்சியில் சேர்ந்த ரஹ்மானி,
தற்போதைய அரசில் அங்கம் வகித்து வந்தார். சமீபத்தில் தலிபான்களுடனான
பேச்சுவார்த்தையை ரஹ்மானி விரிவுபடுத் தினார்.
வைகாசி
14, 2012
2012 இல் உலகம் அழிவதை பொய்யாக்கும்
மாயர்களின்
மற்றுமொரு நாட்காட்டி கண்டுபிடிப்பு

மாயர்களின் பழைமையான நாட்காட்டி ஒன்று கவுன்தமாலாவின் பண்டைய குகை
ஒன்றிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதில் 2012 ஆண்டு உலகம் அழியும் என
மாயர்களின் நாட்காட்டியை மேற்கோள் காட்டி கூறிவந்த தகவல் பொய்யானது
என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கவுன்தமாலாவின் வடகிழக்கிலுள்ள எக்சுல்டுன் வனப்பகுதியிலுள்ள மாயர்களின்
பண்டைய கட்டடம் ஒன்றின் மேற் சுவரில் இந்த நாட்காட்டி பதியப்பட்டுள்ளது.
இந்த சுவரில் மன்னர்கள் மற்றும் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த
நாட்காட்டியை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இது குறித்து
கூறுகையில், 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த நாட்காட்டியில்
சந்திரனின் சுழற்சி காலங்களோடு வெள்ளி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின்
சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்கள் தலையில் கை வைக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் பொருளா தார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து தப்ப பல துறைகளுக்கு வழங்கும் நிதியை
அதிரடியாகக் குறைத்துள்ளது. இதற்கான சட்ட மசோதா அமெரிக்க மேல் சபையில் வியா
ழக்கிழமை கொண்டு வரப்பட் டது. இதன்படி உணவு, தபால் துறை, குழந்தை கள் நலம்
ஆகி யவற்றுக்கு அடுத்த 10 ஆண்டு களுக்கு 240 பில்லியன் டாலரை குறைக்க
மசோதாவில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஆனால் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும்
நிதி எதுவும் குறைக்கப்பட வில்லை.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
இஸ்ரேலை அழிக்க யுத்தம் தேவையில்லை
-
ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேலை அழிப்பதற்கு யுத்தம் ஒன்று செய்ய
தேவையில்லை என்றும் அது வெறுமனே ஒரு நுளம்பு என்றும் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத்
அஹமதி நஜாத் குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்ரேல் நுளம்பை விடவும் பெரிதல்ல,
அடிவானத்திலிருந்து பார்த்தால்கூட அது தென்படாது’ என்று அஹமதிநஜாத்
குறிப்பிட்டார். வடகிழக்கு ஈரானின் கொரசான் மாகாணத்தில் உரையாற்றும்போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘சியோனிச அரசை அழிப்பதற்கு யுத்தம் ஒன்றும்
செய்யத் தேவையில்லை. பிராந்திய நாடுகள் சியோனிசிகளுடனான உறவை துண்டித்து
புறக்கணித்தால் அந்த அரசு தானாகவே அழிந்துவிடும்’ என்று அஹமதிநஜாத்
குறிப்பிட்டார். இதில் ஆட்சியாளர்கள் 60 பில்லியன் டொலர் பெறுமதியான
ஆயுதங்களுக்கு தமது எண்ணெய்யை விற்கிறார்கள் என்று விமர்சித்தார். எனினும்
எந்த நாட்டை இவ்வாறு கூறினார் என்பதை சுட்டிக்காட்டவில்லை. சவூதி அரேபியா
கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கடந்த 20
ஆண்டுகளுக்கு 60 பில்லியன் டொலருக்கு ஆயுதம் வாங்க இணங்கியமை
குறிப்பிடத்தக்கது. ஈரான் ஜனாதிபதி அஹமதி நஜாத் இஸ்ரேலுக்கு எதிராக
தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றார்.
வைகாசி
14, 2012
வாழைச்சேனையில் சிறுவனை கடத்திய 4 பேர் மக்களால் மடக்கிப்பிடிப்பு
வாழைச்சேனை பிரதேசத்தில் பதினாறு (16) வயதுச்
சிறுவனை கடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
(13.05.2012) மதியம் 2.30 மணியளவில் நான்கு பேரை பொதுமக்கள் பிடித்து
பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை ஹைராத் வீதியில் வைத்து சிறுவனை
வானில் கடத்தி வாழைச்சேனை பிரதான வீதியினூடாக பயணிக்கும் போது சிறுவன்
சத்தமிட்டுக் கத்தியதால் சந்தேகப்பட்ட பொது மக்கள் வானில் பயணித்த நான்கு
பேரையும் மடக்கிப்பிடித்து வானையும் சந்தேக நபர்களையும் வாழைச்சேனை பொலிஸில்
ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
வைகாசி
14, 2012
மனிதனின் வேகம்
நன்றாக ஓடும் ஒருவரால் சுமார் 3 நிமிடம், 50
வினாடி நேரத்தில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் ஓட முடியும். 1958 ஆம் ஆண்டு
நிகழ்த்தப்பட்ட உலக சாதனை 3 நிமிடம் 36.8 வினாடி. சாதாரணமாக ஒரு மனிதர்
நடக்கும்போது அவர் ஒரு வினாடிக்கு 7 மீற்றர் தூரத்தைக் கடக்கிறார். ஆனால்
இந்த வேகங்களை அப்படியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
ஏனென்றால் நடந்து செல்கையில் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு மணிக்கு 5 கிலோ
மீற்றர் வேகத்தில் நீங்கள் நடக்க முடியும். ஆனால் ஓடுபவரால் ஒரு குறுகிய
நேரத்துக்குத்தான் ஒரே வேகத்தில் ஓட முடியும்.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
அமைச்சர் ஜீ. எல். இன்று அமெரிக்கா விஜயம்
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை
மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று 14 ஆம்
திகதி அமெரிக்காவுக்குப் பயணமாகின்றார். இவ் விஜயத்தின் போது அமைச்சர்
பேராசிரியர் பீரிஸ் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலரி கிளின்டன், செனட்
சபை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் வாழும் இலங்கையரையும் வெளிவிவகார அமைச்சர்
சந்திப்பார் என அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இவ்விஜயத்தின் போது
ஆட்ரோ வில்சன் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பொது சொற்பொழிவிலும்
இவர் பங்கு பற்றுவார் எனவும் அவர் கூறினார்.
வைகாசி
14, 2012
இலங்கையில் வரலாற்றுச் சாதனை
1000 மெ.தொ சோளம் கனடா, தாய்வானுக்கு 22ஆம் திகதி ஏற்றுமதி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதன்படி,
முதற்கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஏற்றுமதி
செய்யப்படுமென சோளப் பயிர்ச்செய்கையிலீடுபடும் விவசாய சங்கத்தின் தலைவர்
சாகுல்ஹமீட் சாதிக்கீன் தினகரனுக்குத் தெரிவித்தார். சோள
ஏற்றுமதியினையொட்டிய உத்தியோகபூர்வ நிகழ்வு 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, கைத்தொழில்
மற்றும் வாணிபத் துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட பல
முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
(மேலும்.....)
வைகாசி
14, 2012
சீன பாலைவனப் பகுதியில் 1,500 ஆண்டு பழமையான புத்தர் கோயில் கண்டுபிடிப்பு
சீனாவில் ஸிங்சியாங் பகுதியில் உள்ள பாலைவனப்
பகுதியில் சமீபத்தில் நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் 1,500 ஆண்டுகள் பழமை
யான புத்தர் கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள
குறிப்புகளில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு புத்த மதம் பரவிய விதம்
குறித்து விரிவாக விளக்கப்பட்டுள் ளது. இதன் அமைப்பு வழக் கமான கோயில்களில்
இருந்து வித்தியாசமாக உள்ளது. மைய மண்டபத்தில் மிகப் பெரிய புத்தர் சிலை
இருக்கி றது என்று அகழ்வாராய்ச்சிக் குழுத் தலைவர் உசின் ஹுவா தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களாக இப்பணி நடந்து வருகிறது.
வைகாசி
13, 2012
இராணுவ வீரரின் பாரபட்சம் நல்லிணக்கத்துக்கு ஆப்பு
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கடந்த இரவு (12.05.2012) 11.30 மணியளவில்
தமது வீட்டினுள் புகுந்த ஒருவரை துரத்திச் சென்று பிடித்த சகோதரர்கள்
இருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
வீட்டினுள் ஆள் நடமாட்டத்தை அவதானித்த தாயார் நாகேஸ்வரி சத்தமிட்டதை
தொடர்ந்து, வீட்டினுள் புகுந்த நபரை துரத்திச் சென்று பிடித்த அண்ணனும்,
தம்பியுமே சம்பவ இடத்திற்கு அருகில், ஏ 9 வீதியில் காவலரணிலிருந்து அழைத்து
வரப்பட்ட இராணுவத்தினரின் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தாக்குதலில்
தலையில் காயமடைந்த இளைய சகோதரன் ஐங்கரன், வயது 21 சாவகச்சேரி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
கூட்டமைப்பிற்குள் குழப்பம்
தேசியக் கொடியை இனியும் ஏற்றுவாராம் சம்பந்தன்!

சிங்க கொடியை முன்னரும் பல தடவை
ஏற்றிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன்,
அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தன் கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு
கூட்டத்தில் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம்
ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு செல்வது தொடர்பாக முதலில்
ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை
எழுப்பினார். ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக் கொடியை
பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேச விரோதம் என
காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
இலங்கைத் தமிழர் பிரச்னை
- ஓர் ஆய்வு
(பகுதி 11)
(அ.ஆனந்தன்)
இந்த மோசமான வளர்ச்சிப் போக்குகள் தமிழர்
விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தன. அந்த
அமைப்புகள் அவற்றிற்கு இருந்த பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே இப்பிரச்னையை
எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தனிநாடு கோரிக்கையை எழுப்புவதில்
பெரும் சிக்கல் இருந்தது. நாடு முழுவதும் விரவிக்கிடந்த தமிழர்களின் நலன்
தனிநாடு கோரிக்கையை எடுத்த எடுப்பில் முன்வைப்பதன் மூலம் பாதிக்கப்படும்
என்ற சூழ்நிலை அவர்களின் கரங்களைப் பெருமளவு கட்டிப் போட்டது.
அது மட்டுமல்ல தமிழர்களில் வளர்ச்சியடைந்த பகுதியினர் தங்களது தொழில்
வாய்ப்புகளுக்கு தமிழர் பகுதிகளோடு இலங்கை போன்ற ஒரு பெரிய சந்தையைக் கொண்ட
நாடு இருப்பது அவசியம் என்றும் கருதினர். எனவே தமிழர் விடுதலை முன்னணி
கோட்பாடு ரீதியான தேசிய சுயநிர்ணய உரிமை கேள்வியை முன்வைக்காமல் பல
சமயங்களில் தங்களுக்கு சலுகை அளிக்க முன்வரும் சிங்கள ஆளும் வர்க்க
கட்சிகளுடன் நேரடி அல்லது இலைமறை காய்மறை உறவு வைத்துக் கொள்வதன் மூலமே
இப்பிரச்னைகளுக்கான தீர்வினைப் பெற விரும்பின.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
சோமாலிய
கடற்கொள்ளையர்களிடமிருந்து மீண்ட இலங்கை மீனவர்கள்
பயங்கர அனுபவங்களைப் பகர்கின்றார் பெருமாள்
செல்வராஜா

சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்திச்
செல்லப் பட்டு ஏழுமாதம் தடுத்து வைக்கப் பட்டு சொல்லொணாத் துன்பங்களை
அனுபவித்து விட்டு இலங்கை திரும்பிய மீனவர்களில் ஒருவரான பெருமாள்
செல்வராஜாவை தினகரன் வாரமஞ்சரியின் சார்பாக அண்மையில் காணச் சென்றேன்.
நீர்கொழும்பில் மழை ‘சோ’ எனக் கொட்டிக்கொண்டிருந்தது. மழையில் நனைந்த
நிலையில் நீர்கொழும்பு பிட்டிபனைக்குச் சென்றேன். பிட்டிபனை சந்தியிலிருந்து
பெருமாள் செல்வராஜ் வீடு இருக்கும் (இரண்டாம்) தீவுக்குள் செல்ல வேண்டும்.
பிட்டிபன சந்தி யிலிருந்து தீவை இணைக்கும் பாலத்தில் ஏறியதும் அவரது இளைய
மகள் டியூசன் வகுப்பு முடிந்துவரவும் எனக்கும் பயணம் எளிதாக இருந்தது.
முதலாம் தீவைக் கடந்து இரண்டாம் தீவுக்குள் நுழைய வேண்டும் முதலாம் தீவையும்
இரண்டாம் தீவையும் இணைக்கும் பாலத்தில் ஏறியதும் மழை தனது கோரத்தைக்
காட்டியது. வீதியெங்கும் மழைச் சகதி அதன் மேல் நடந்து செல்வராஜ் வீட்டை
அடைந்து விட்டேன். பிரதான வீதிக்கும் தீவுக்கும் சுமார் மூன்று கி.மீ.
இருக்கும். எனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு பயணத்தை இதுவரை மேற்கொள்ளவே
இல்லை. தீவு முழுவதுமாக காட்டுமரங்கள்.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
கிளிநொச்சி கொலை
குறித்து கனடா முழுமையான விசாரணை கோருகிறது

இலங்கையின் வடக்கில்கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனடிய பிரஜை கொலை
செய்யப்பட்டமை குறித்து இலங்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தாம்
எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது. போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது
குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடாவின் பிரஜையான அந்த
இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் அங்கு வந்திருந்தபோது
கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே
அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால்
கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கைக்கான கனடாவின் தூதுவர் புரூஸ் லெவி
பிபிசியிடம் கூறியுள்ளார்.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்தி தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் முகத்தில் கரியைப் பூசியதன் மூலமும், தம்புள்ள
முஸ்லிம் பள்ளிவாசல் சம்பவத்தில் அத னைப் பூதாகாரமாக்கி மதவிவகாரத்தை
அரசியலாக்கி குளிர்காய முனைந்தமை மூலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
சிறுபான்மை மக்களிடையே இருந்த சிறிதளவான ஆதரவை யும் இல்லாமல் செய்துள்ளது.
ஏற்கனவே தெற்கில் மிக மோசமாகச் சரிந்து போயிருந்த தமது இருப்பை வடக்கிற்குச்
சென்று தமிழ் மக்களின் ஆதரவுடன் தட்டி நிமிர்த்தப் பார்த்த ஐ.தே.க.விற்கு
அங்கு சென்றமை யால் மீதமாக விருந்த சிறிய ஆதரவும் இல்லையென்று ஆகிவிட்டது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது குள்ளநரி மூளையைப் பாவித்து
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கைகளில் தேசியக் கொடியைத்
திணித்தமை ஐ.தே.க. ஆதரவுடைய தமிழ் மக்களி டையே கடும் விமர்சனத்தைத்
தோற்றுவித்துள்ளது.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
தலைவர் சம்பந்தனின் செயற்பாடுகள் தெரிவுக் குழுவில் பங்கேற்பதற்கான
சமிக்ஞையா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.
சம்பந்தன் யாழ் மேதினக் கூட்டத்தில் வைத்து தேசியக் கொடியை ஏந்தியமை அல்லது
அசைத்தமை - தேசியப் பிரச்சினை தொடர்பிலான தேசிய
சம்பாஷணைக்குள்ளாகியிருக்கிறது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் அவரது
தேசியத்துவ நல்லெண்ணங்களையும் தேசப்பற்று சார்வுப் போக்கினையும்
சந்தேகத்துக்குட்படுத்தி நோக்கியிருக்கலாம். அதேநேரம் இலங்கைக்கு விஜயம்
செய்திருந்த இந்தியத் தூதுக் குழுவிடம் தான் ஒரு இலங்கையராக மரணிப்பதை
பெருமைப்படுவேன் என்றும் கூறியிருந்ததை நினைவூட்டிப் பார்க்க முடியும். இது
அரசாங்கத்துக்குள்ளும் வெளியேயும் உள்ள கடுங்கோட்பாளர்களின் கவனத்துக்கு
கொண்டு வரப்பட வேண்டியதாகும். அந்த வகையில் தமிழ் தேசியவாதிகளை தமிழ்
தேசியவாதம் கொண்டவர்களாக மாத்திரம் வர்ணிக்க முடியாத நிலை தற்போதைக்கு
தோன்றியுள்ளதாக நோக்கர்கள் அபிப் பிராயப்படுகின்றனர்.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
தனியொருவரின் தீர்மானமெடுத்தலுக்கு
முற்றுப்புள்ளி
TNA யில்
இனிமேல் எந்தவொரு முடிவெடுக்கவும் அதியுயர் சபை! சம்பந்தன் ஐயாவிற்கு இளம்
உறுப்பினர்கள் ஆப்பு
தனி மனித தன்னிச்சையான முடிவுகள்
எடுக்கப்படுவதை தவிர்த்து மக்களின் நலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கும்
அதியுயர் சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை கொழும்பில் நடந்த தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும்
பிரதிநிதிகளுமான ஆர். சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன்,
சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோ நோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன்
ஆகியோர் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
காரியாலயத்தில் சந்தித்து உரையாடினர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை
ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒரு பொறி முறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
கிழக்கில்
முஸ்லிம் முதலமைச்சர் எனும் கொள்கையுடனேயே ACMC களத்தில்!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும்
முஸ்லிம் முதலமைச்சர் வேட்பாளரை மையமாகக் கொண்டே களத்தில் இறங்குவதாகவும்
இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளோம் என்றும்
மாகாண அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார். கடந்த முறை நாம் கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில் போட்டி யிட்டு கணிசமான பிரதிநிதிகளைப் பெற்றோம்.
எனினும் அரசுடனான இணக்கப்பாட்டின் பின்னர் பிள்ளையான் முதலமைச்சரானார்.
மாகாணசபையில் எமக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது. இம்முறையும் நாம் களத்தில்
இறங்குகின்றோம். எமது கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் அமீரலி, நான்
மற்றும் காத்தான்குடி சார்பான இன்னுமொரு வேட்பாளர் போட்டியிடுகின்றோம்.
மாகாண அமைச்சுப் பதவி எமது கட்சிக்கு வழங்கப்பட்டதன் பின்னர் கணிசமான
அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைகாசி
13, 2012
ஒபாமாவின்
ஒருபால் திருமண அங்கீகாரத்தால் அமைதியிழக்கும் அமெரிக்கா, ஐரோப்பா?
அமெரிக்காவின் எல்லையில்லாத தனிமனித சுதந்திரம் இறைவனின் ஏற்பாடுகளை
கட்டமைப்புகளை உடைத்துச் செல்லுமளவு அல்லது உதாசீனம் செய்யுமளவிற்கு
போய்விடுமோ என்பதே இன்றைய மத தலைமைகளின் அங்கலாய்ப்பும் ஆதங்கமும். காதல்
என்றாலும், கல்யாணம் என்றாலும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில்தான் நடக்கும்.
உலகத்தைப் படைத்த ஆண்டவன் ஆதமையும், ஏவாளையும் சோடியாகப் படைத்து,
குடும்பமாக்கி மனித குலம் பெருகச் செய்தான். இதை அடிப்படையாகக் கொண்டே எல்லா
வேதங்களும் ஆணையும், பெண்ணையும் சடங்குகள் செய்து சம்பிரதாய முறையிலான
திருமணங் களை நடத்துகின்றன.
(மேலும்.....)
வைகாசி
13, 2012
உடுத்த உடுப்புடன் விரட்டியபோது மெளனம்
இன்று
முஸ்லிம்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பு
இருபதாண்டுகளுக்கு முன் யாழில் தாம் வாழ்ந்த சொந்த மண்ணிலிருந்து உடுத்த
உடையுடன் சுமார் 75,000 முஸ்லிம்கள் இரவோடு இரவாக கலைத்து வெளியேற்ற
ப்பட்டனர். அந்த கசப்பான உண்மை சகலருக்குமே தெரியும். துரத்தப்பட்டவர்கள்
யார் என்று கூட சொல்ல வாய் கூச்சமடைகிறது. இது தானா உங்கள் ஜனநாயக மரபு.
அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் கூட்டமைப்பினர் வாய் கூடத் திறக்காமல் இருந்து
மெளனம் சாதித்தனர். அது மாத்திரமல்ல இந்த அபாண்டத்தை எந்த ஒரு தமிழ்க்கட்சி
உறுப்பினரும் வாய்திறந்து பேச முன்வரவில்லை. ஆனால் இன்று போலிக்காக முதலைக்
கண்ணீர் வடிக்கின்றனர் தமிழ் கட்சியினர். ஆகவே இந்த அகதிகளுக்காக கட்டி
வழங்கப்படவிருக்கும் புது வீடுகள் இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நான்
கேட்டுக் கொள்கிறேன். இதை விட்டு விட்டு பகட்டுக்காக வெளியே நன்றாக நடிக்க
வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வைகாசி
13, 2012
சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்திய விவகாரம்
மன்னிப்பை
மறைக்க மாவை செய்த மகா தந்திரம் அம்பலம், உண்மையென நம்பி ஏமாந்தன பல தமிழ்
ஊடகங்கள்
யாழ்ப்பாண மே தினக் கூட்டத்தில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தன் எமது இலங்கைத் திருநாட்டின்
தேசியக் கொடியை ஏந்தியமைக்காக யாழ்ப்பாணத்தில் சுதந்திர ஊடகக் குரல் அமைப்
பினரால் நடத்திய உலக ஊடக சுதந்திர தின விழாவில் வைத்து மாவை சேனாதிராஜா தனது
வாயால் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். அதன் பின்னர்
அதை இரா. சம்பந்தன் முற்றாக மறுதலித்து தேசியக் கொடியை தான் சுயவிருப்புடன்,
நன்கு தெரிந்தே ஏந்தினேன் என்றும் அதற்காக எவரும் மன்னிப்புக் கோரத்
தேவையில்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனால் மாவை
சேனாதிராஜாவின் மார்க்கட் பெரிதும் சரிந்து காணப்பட்டதுடன் சக
அங்கத்தவர்களின் வெறுப்புக்கும் ஆளாக நேர்ந்தது. இதனைச் சரி செய்யும்
வகையில் கடந்த புதனன்று பாராளுமன்றத் தில் தனக்குப் பேசக் கிடைத்த
சந்தர்ப்பத்தில் மாவை எம்.பி. தமிழருக்காக உயிரைக் கொடுப்பது போன்று
உரையாற்றியது மட்டுமல்லாது தீர்வு விடயத்தில் அரசாங்கம் வழிக்கு வராவிட்டால்
மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் (ஆயுதப் போராட்டமல்ல, சாத்வீகப் பேராட்டம்)
நடத்தப் போவதாக உரத்துப் பேசினார். உண்மையில் அவர் மன்னிப்பு விவகாரத்தை
மறைத்து, இழந்த விரு ப்பை மீண்டும் சரி செய்யவே அவ்வாறு பேசினார் என்பதை
தமிழ் மக்கள் உடனடியாகவே புரிந்துகொண்டு விட்டனர். ஆனால் இவ்விடயத்தைப்
புரிந்துகொள்ளாத தமிழ்ப் பத்திரிகைகளும், இணையத் தளங்களும் மாவை எம்.பி.
வீரமாக அதுவும் பாராளுமன்றத்தில் பேசிவிட்டார் என்பதாக கொட்டை எழுத்தில்
செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு அவரது படத்துடன் வெளி யிட்ட விதம்
உண்மையிலேயே நகைப் புக்குரியது.