பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றி வருகின்றார். இதன்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வரலாற்றில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் ஒரு பொருளாதார சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம். யாரும் பயப்பட வேண்டாம். முதன்மைக் கணக்கு இரண்டரை தசமப் புள்ளிகளின் உபரியைப் பராமரிப்பதாகும். மாற்று விகிதங்கள் இனி அதிகமாக ஏற்ற இறக்கமடையாத ஒரு செயல்முறை அமைக்கப்பட்டு வருகிறது.

திராய்க்கேணி படுகொலைகள்

‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத்  தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

12 பேரை நாடுகடத்த உத்தரவு

சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த   சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும்  உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.

முன்னாள் எம்.பி திலீபன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து மற்றொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால்  திங்கட்கிழமை (10) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

’’அழகான உலகை கட்டியெழுப்ப வாருங்கள்’’ – அநுர

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

உக்ரைன் போர் விவிகாரம்:புட்டினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும்

நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

தேங்காய் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மர பயிர்செய்​கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சார கட்டணம் 20 சதவீதம் குறைப்பு

மின்சார கட்டணம் 20 சதவீதம் வௌ்ளிக்கிழமை (17) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று (17)  அறிவித்துள்ளது. 0 – 30 அலகுகளுக்கு 29% 31 – 60 அலகுகளுக்கு 28% 61 – 90 அலகுகளுக்கு 19% 91 – 180 அலகுகளுக்கு 18% 180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12% அரச நிறுவனங்களுக்கு 11% ஹோட்டல் துறைக்கு 31% வழிபாட்டுத்தலங்களுக்கு 21% தொழிற்துறைக்கு 30% வீதி விளக்குகளுக்கு 11% மொத்த விலைக் குறைப்பு 20% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் இன்று நள்ளிரவு (17) முதல் அமுலுக்கு வரும்.