5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.

தமிழ் அடியான்

தமிழ் அடியான் என அழைக்கப்படும் YouTube influencer ரஜிவன் ராமலிங்கம் (Rajeevan Ramalingam) என்பவர் வைத்தியர் ராமநாதன் அர்சுனாவிற்கு மிக அகோரமாக சொம்படித்து வருவது அனைவரும் அறிந்த விடயமே

துப்பாக்கிச்சூட்டில் இருவர் மரணம் : வேன் எரிக்கப்பட்டது

மாத்தறை – தெவுந்த, சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய அவர்களால் இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது. 

கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் கைச்சாத்திட்டனர். 

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடும்ப வைத்தியர் திட்டம்

குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார். இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.

தையிட்டி விகாரை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை ஆரம்பித்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, மேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர்   பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் வௌ்ளிக்கிழமை (21) ஈடுபட்டனர். பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள் பலர் கண்ணீர் மல்கினர். 

லண்டனுக்கான விமானங்கள் இரத்து

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் இன்று புறப்படவிருந்த UL 503 மற்றும் 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது

சந்திரவெளி படுகொலை : 4 பேருக்கு மரண தண்டனை

கனகராசா சரவணன் மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த  4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து  தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த  மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால்  அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு  மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.