கெஹலியவின் பெயர் நீக்கம்

கொழும்பு, வத்தேகம கல்வி வலயத்தின் கண்டி, குண்டசாலை பிரிவுக்குட்பட்ட ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’ என்ற பெயரை உடனடியாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று அனுமதியளித்துள்ளார்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவன் கைது

கடந்த 3 நாள்களில், இந்தியாவில் 12 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறுவன் ஒருவன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது.

அனுசரணை அரசியலின் நிறுவனமயமாக்கல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அனுசரணை அரசியல் தவிர்க்கவியலாததாகவும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் அமைந்தமைக்கான காரணங்களிலொன்று அரச நிறுவனங்கள் அனுசரணை அரசியலுக்கு ஆதரவாக செயற்பட்டமையாகும்.

’விவசாயத்துறை தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் தேவை’ – அநுரகுமார திஸநாயக்க

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

’வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்’ – அநுரகுமார திஸநாயக்க

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.

இன்றும் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
  இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய,  ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெற்றோல் பௌசர் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோசமடையும் விரிசல்: இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம்

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது.  இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது

24 வருடங்களுக்குப் பின் கிடைத்த கொடூர தண்டனை

காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின் கொலைவழக்கு ஒன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரட்டுஹேனகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில், இமதுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டது.