வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

ரூ.200க்கு சத்தான உணவு;அரசாங்கத்தின் புதிய திட்டம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்க முயற்சி இன்று (01) நாரஹேன்பிட்டயில் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் “பலேசா” உணவகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

கிளிநொச்சியில் நீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி

உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாரிய நீர்
வழங்கல் திட்டத்திற்கு  கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த 28.03.2025  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“அடுத்த பிரதமரை ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும்” : சஞ்சய் ராவத்

“பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

’அமெரிக்காவால் எங்களை வாங்க முடியாது’ – கிரீன்லாந்து பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறார். ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.

ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தடைவிதிக்கும் விதமாக புதிய அணுசக்தி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஈரானுக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். 

மூன்றாவது பதவிக்காலம்: நகைச்சுவை அல்ல – ட்ரம்ப்

மூன்றாவது பதவிக்காலமொன்றை எதிர்பார்ப்பது குறித்து நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லையென ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின்படி மூன்றாவது பதவிக்காலம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நலிவின் முதல் குணங்குறிகள்

(தெ. ஞாலசீர்த்திமீநிலங்கோ)

1940களின் பிற்பகுதியிலும் 1950களின் பிற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய இடைக்காலப் பொருளாதார அமைப்பு, தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் முழுமையாகத் தோல்வியடையாவிட்டாலும், சுதந்திரத்தின் கிடைத்ததின் பலன்களை அறுவடை செய்ய இயலவில்லை.

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை(30)கைது செய்யப்பட்டுள்ளதுடன் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடமைகளிலிருந்து விலகத் தீர்மானம்

கொழும்பு வலயத்தில் உள்ள உப ரயில் நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல ரயில் நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.