தரகராக செயல்பட்ட இஷாரா

பாதாள உலக குழுவின் தலைவனான ‘கெஹெல்பத்தர பத்மே’ போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் ஊடாக வெள்ளைப் பணமாக (நித்தியானுகூலமான பணம்) மாற்றியமைத்த சட்டவிரோத நெட்வொர்க்கின் பிரதான பெண் ஏஜென்ட்டாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள ‘இஷாரா செவ்வந்தி’ செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது..

அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் மனிதத்தோடு உதவியிருந்தாலும்..குறிப்பாக மெத்தை கடை வைத்திருக்கும் ரியாசுதீன் மன்சூரியும் அவரது மகன் அர்மானும் உடனடியாகச் செயல்பட்டனர்.

’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி

தனது கணவன், எந்தவொரு தப்பும் செய்யாத நிரபராதி என்றும், அநீதியான முறையில் ஒரு “பலிக்கடா” ஆகப் பயன்படுத்தப்படுகிறார் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே தெரிவித்தார்.

கம்மன்பிலவுக்கு பொலிஸ் அறிவுரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவரைப் பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, வெளியிட்ட கருத்துக்களை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்

வடக்கு நைஜரின் சஹாரா பாலைவனப் பிராந்தியத்திலுள்ள   பகுதியொன்றில், ஆகக்குறைந்தது 49 பேர் “தாகத்தினால் துடிதுடித்து” உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த லொறி (Truck) பழுதடைந்ததை அடுத்து, பல நாட்களாகப் பாலைவனத்தில் தவித்த நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தர் சிலையை தூக்கிய பிக்கு கைது

மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து திருடப்பட்ட, தொல்பொருள் மதிப்புமிக்க சமாதி புத்திசிலை ஒன்றுடன் பிக்கு ஒருவர், அவருக்கு உதவிய நபர் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரிகள்   இருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

’’நாடே ஒன்றாக’’ : ஒரே நாளில் 979 பேர் கைது

இலங்கையில் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பது, போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவது, அதன் தேவையை குறைப்பது மற்றும் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் “நாடே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கை கடந்த 2025.10.30ஆம் திகதி முதல் நாடேங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, 2026.06.06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தினசரி அறிக்கை விபரம் பின்வருமாறு:

கொடை

மதுரை. மீனாட்சி கோவில் வாசல். பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு.

ஓமந்தையில் ஒருவர் படுகொலை

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் 2026.06.06 ஆம் திகதி இரவு வேளையில், தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யார் இந்தக் கரப்பான் பூச்சிக் கட்சியினர்?

(Siraj Mashoor)

நேற்று புதுடில்லியின் ஆர்ப்பாட்டக் களமான ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜன்தா கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இதில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருப்பது, ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது.