கத்திரி வெயில்: பிரான்சில் 7 பேர் பலி

மேற்கத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைக்கும் கடுமையான ஆரம்பகால கோடை வெப்ப அலையினால், பிரான்சில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் மே மாதத்திற்கான தங்களது அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளன. மேலும், செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கிவ்வை விட்டு வெளியேற வெளிநாட்டவர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரேனியத் தலைநகர் கிவ்விலுள்ள இராணுவத் தளவாட தொழிற்சாலைகள் மீது தொடர்ச்சியான திட்டமிட்ட தாக்குதல்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்த ரஷ்யா, வெளிநாட்டுப் பிரஜைகளை கிவ்வை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு

ஈ​ரான் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்டுள்ளன. ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள இராணுவ நிலைகளைக் குறி​வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. குறிப்​பாக ஈரானின் முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​ணிவெடிகளை வீசிக் கொண்​டிருந்த ஈரான் இராணுவ படகு​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்ளது. 

50 % ஊதியக் குறைப்பை எடுத்துக் கொள்ளும் ஜனாதிபதி

பொலிவிய ஜனாதிபதி றொட்றிகோ பஸ்ஸின் இராஜினாமாவைக் கோரும் ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனதும் தனது அமைச்சரவை அமைச்சர்களதும் ஊதியத்தை அரைவாசியாகக் குறைக்கப் போவதாக ஜனாதிபதி பஸ் தெரிவித்துள்ளார்.

8.75 சதவீதம் வட்டி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை  (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.  

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” அமைப்பினால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“அநுராதபுரத்தில் இதெல்லாம் சாதாரணமாம்!

” பிரிட்டன் இளவரசருக்கே சிறை; இலங்கையில் பிக்குவிற்கு விசேட சலுகையா? கூச்சமின்றி வாதிடும் சட்டத்தரணிகள்!அமெரிக்காவில் சிறுமி ஒருவருடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசரே அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சர்வதேசச் சம்பவங்கள் உலகிற்குச் சட்டத்தின் வலிமையை உணர்த்தியிருந்தன.

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.


திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.

சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.

Sinthanai Selvan அவர்களுக்கு மிக்க நன்றி

நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்த கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

மேனாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் பதிவு

தொலைக்காட்சியில் விஜய் அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விரியும் எனது பொதுவாழ்வில் குறைந்தது இருபத்தைந்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பேன் பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் இரண்டு, மூன்று முறைகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அல்லது அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். பொதுமக்களுக்கும், அரசியல் வட்டாரங்களிலும் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பார்கள்.