1,750 ரூபாயை தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (20) அன்று நடைபெற்றது.

வியட்நாமில் கோர விபத்து: பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 7 பேர் பலி

வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு ஏற்பாட்டாளர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஈழத்தின் மூத்த போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்ணெண்ணெயில் ஓடிய 3 பேருந்துகள் சிக்கின

நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்பட்ட மூன்று பேருந்துகளை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன், மேலதிக பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகளையும் அனுப்பியுள்ளனர்.

கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆராய்வு நடத்த முடிவு

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அவிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் அதிரடி: 3 அரச நிறுவனங்கள் மீது வழக்குத் தாக்கல்

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்புச் செயல் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமணப் பதிவுகள்: கடந்த 15 ஆண்டுகளில் 28% சரிவு

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

காணி விடுவிப்பை வலியுறுத்தி பலாலியில் தொடரும் போராட்டம்

வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில்    ஞாயிற்றுக்கிழமை(19) அன்று ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் நாட்டு புதிய அரசியல் கலாச்சாரம்

(Panner Selvam)
அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராகிறார், கலைஞர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலி தலைமை செயலகத்தின் வெளியில் எடுத்து வீசப்பட்டு உடைக்கப்படுகிறது.