ஈரான் மீது அமெரிக்காவின் தொடர் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்போதைய மோதல் “மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாக, ஈரானின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 9) அதிகாலை தொடர்ச்சியான வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

ஊதிப் பெருப்பிக்கப்பட்ட சிறிய பிரச்சினை

(மொஹமட் பாதுஷா)

கல்முனையில் இளைஞர் ஒருவர் நாயைத் தாக்கிய சம்பவம், ஒரு சாதாரண விடயமாகத் தெரிந்தாலும், அது பற்றிய பொறுப்பற்ற எதிர்வினைகளின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு விவகாரமாக மாறியிருக்கின்றது; அல்லது யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இந்தியர் ஒருவர் பலி

இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் 73 வயதுடைய உண்ணிகிருஷ்ணன் எஸ். (Unnikrishnan S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

’’குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’’

இலங்கை விசேட குடும்ப வைத்தியர்கள் கல்லூரி (SLCSFP), ‘குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’ (Walk for Family Health 2026) எனும் பொது விழிப்புணர்வு நிகழ்வை  2026 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.  

இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை (LRT) நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகவே இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

13 வயது சிறுமி வன்புணர்வு: ஐ.ஆர்.சிக்கு பிணை: உத்தரவால் பரபரப்பு

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான ஐ.ஆர்.சி. (IRC) பட்டியலில் உள்ள சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (08) பிணையில் விடுவித்துள்ளது.

வின்சர் ஹோட்டல் முன்பகுதி அதிரடியாக மீட்பு

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக நடைபாதை வியாபாரம் மேற்கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, நுவரெலியா வின்சர் ஹோட்டலுக்கு (Windsor Hotel) முன்பாக தற்காலிக நடைபாதை வியாபாரத்திற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீரவன்சவின்: ’நெத்த வெனுவெட்ட எத்த’ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை உயர்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (09) அன்று தள்ளுபடி செய்தது.

மருந்து விற்பனையில் மோசடி: மருந்தகங்களுக்கு பூட்டு

கொழும்பு பகுதியில் உள்ள நான்கு மருந்தக உரிமையாளர்களுக்கு, மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான அபராதத்தை விதித்துள்ளது.

ஹட்டனில் 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பு அழிப்பு

ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் மேலதிக நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவற்றை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.