(Olivannan Gopalakrishnan)
இப்படிப்பட்ட தேர்தல் முடிவு வரும் எனக் கடந்த சில நாட்களாகவே மனதிற்குள் உணர்வலைகள் எழுந்தன. நேற்று கூட சில நண்பர்களிடம் எனது அய்யத்தை எழுப்பிய போது அவர்கள் சிரித்துக் கொண்டே உங்களுக்கே அப்படி வரலாமா, வெற்றி நமதே என்றார்கள். இருந்த போதும் கூட மனதுக்குள் ஏதோ ஒன்று நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது.
சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே
(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
உக்குவளையில் ‘திறமையின் களம்’
உலகத் தொழிலாளர் தினத்தை (மே தினம்) முன்னிட்டு, உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. தலகொட்டுவ எனும் இடத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த மாணவச் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘திறமையின் களம்’ ஒலிப்பதிவு நிகழ்ச்சியும், சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றன.
“மீனவர்களின் துயரம் தீரவில்லை” ; வேந்தன் ஆதங்கம்
காலங்காலமாகத் தொடரும் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், நாளுக்கு நாள் அதன் தீவிரம் அதிகரித்துச் செல்வதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே முதலாம் திகதி ‘ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி’ ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2.5 மில்லியன் டொலர் சூறையாடல்: FBI தீவிர விசாரணை
இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெறப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தகவலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


