“நெதன்யாகு ஒவ்வொரு நாளையும் மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொண்டே தொடங்குகிறார்” என பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

The Formula
பிஹாரின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார். பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் பிஹாரின் முதல்வராவது இதுவே முதன்முறையாகும். சுமார் 21 ஆண்டுகளாக் பிஹார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.கவின் சாம்ராட் சவுத்ரி (57 வயது), நேற்று (15) பிஹார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை கடந்த மார்ச் 25 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் இவ்வகையான சத்திரசிகிச்சை புத்தளத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம் வாரீர்!” மலையகப் பெருந்தோட்ட மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வரும் அடிப்படைச் சுயவுரிமைப் பிரச்சினைகளில் முதன்மையானது நில உரிமை மற்றும் வீட்டுரிமை ஆகும்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தரப்பினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது.
