மட்டக்களப்பு சிறையில் பதற்றம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், இளைஞர் ஒருவர் தனது கழுத்தை  அறுத்துத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் உணவகம் மீது சட்ட நடவடிக்கை

மன்னார் நகரில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகளில் மாற்றம்

மின்சாரத் தொடருந்துப் பெட்டிகளின் (Power sets) பற்றாக்குறை காரணமாக, கல்கிசை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையிலான தினசரி கடுகதித் தொடருந்துச் சேவை, ஜூலை 10-ஆம் திகதி முதல் வாரத்திற்கு நான்கு நாட்களாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் மாநாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர்.

’’நாமல் புலம்புவது நியாயமே’’

சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இன்மை குறித்து நாமல் ராஜபக்ச கவலைப்படுவது நியாயமானது என்றும், அவர் அவ்வாறு புலம்புவதில் தவறில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

உயிரிழந்த அதிகாரிகளின் சடலங்கள் கொழும்புக்கு வருகிறது

நீர்கொழும்பு சிறைச்சாலையில்   இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த  சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக பொரளை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்வேலியில் சிக்கி 62 வயது நபர் உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில், மின்வேலியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை (06) அன்று காலை இடம்பெற்றுள்ளது.

’’இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை’’ மஹிந்த ராஜபக்ஷ

“இவர்கள் செய்வது ஒரு பழிவாங்கல் நடவடிக்கைதான். இது அவர்கள் வழமையாகச் செய்யும் ஒன்றுதான்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்க்கட்சி அரசியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் பொறுப்பேற்கிறேன்: நீதி அமைச்சர் ஹர்ஷன

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் சம்பவம் தொடர்பில் தான் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சராக, இந்தச் சம்பவத்திற்குத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.