பொகவந்தலாவில் கையெழுத்து வேட்டை

ஹட்டன் நகரில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை மீண்டும் நோர்வூட் பகுதிக்கே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, ‘மலையக அரசியல் அரங்கம்’ கட்சியினால் திங்கட்கிழமை (27) அன்று பொகவந்தலாவ நகரில் கையெழுத்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கைதி மரணம் தொடர்பில் நடவடிக்கை

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஜெயிலர் ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாச்சிமார் ஆலயத்திலிருந்து இராணுவம் வெளியேறியது

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

‘அமைதி நடைப்பயணம்’: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அமைதி நடைப்பயணம்’ (Walk for Peace Program Sri Lanka) நாளை, 2026.04.28 அன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில் கொழும்பு-07, சுதந்திர சதுக்கப் வளாகத்தில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹட்டனில் பதற்றம் ; வாயில் பிளாஸ்டருடன் உறுப்பினர் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாதாந்த அமர்வு,  கடுமையான பதற்ற நிலையை எட்டியது.  கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் சபை அறிக்கை (Minutes) தொடர்பான சர்ச்சை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான அமர்வே மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.

’திறைசேரி நிதி மோசடியில் ஜனாதிபதி, செயலாளருக்கும் தொடர்பா?’ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருக்கின்றதா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஈரோஸ்இயக்கத்தை கலைத்து விட்டு புலிகளிடம் இணைந்த பாலகுமார் தொடர்பான பார்வை.

Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

2.5 மில்லியன் டொலர் கொள்ளை குறித்து IMF அவதானம்

இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணைய குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அவதானத்தைச் செலுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தரம் தாழ்ந்த பேச்சு: ட்ரம்புக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

காசாவின் இனவழிப்பு: உண்மைக் காரணி

(Mukinthan Thurairajasingham)

காசாவில் இன்று நடக்கும் இனப்படுகொலைகளும், நில ஆக்கிரமிப்புகளும், மக்கள் வெளியேற்றமும் திடீரென உருவானவை அல்ல.