கோட்டாபயவின் முக்கிய புள்ளி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களை இலக்கு வைத்த மதனமோதகம் மீட்பு

பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,74,200 ரூபாய் மதிப்புடைய 1,214 மதனமோதக (குலி) மாத்திரைகளை, புதன்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன அழிப்பின் நினைவகம் செம்மணி: நல்லூரில் தீர்மானம்

செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக (Memorial) மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.

9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கை வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, லங்கா சதொச நிறுவனம் 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

கடைசி நிமிட த்ரில்லர்: பனாமாவுக்கு அதிர்ச்சியளித்த கானா

95ஆவது நிமிடத்தில் வந்த மிரட்டல் கோல்; 1–0 என்ற கணக்கில் கானா த்ரில் வெற்றி

உலக க்கிண்ண கால்பந்தாட்ட திருவிழாவின் ‘குரூப் L’ பிரிவில் இன்று நடைபெற்ற வாழ்வா-சாவா ஆட்டத்தில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய மீதான kD ஒத்திவைப்பு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைதுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” எனும் தொனிப்பொருளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில், யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

52 வருட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்த காங்கோவின் தங்கக் கோல்

(JM Hiflan)

1974 இன் கறுப்பு வரலாற்றை மாற்றிய விதம்!உலகக் கிண்ணப் காற்பந்து அரங்கில் நாம் கேட்கும் காங்கோ (DR Congo) அணியின் மீள்வருகையானது, வெறும் ஒரு தொடருக்கான தகுதிபெறுகை மட்டுமல்ல.

வோசின்ஹா

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை 0-0 என சமன் செய்து, உலகையே வியக்க வைத்த கேப் வெர்டே (Cape Verde) அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா (Vozinha) மற்றும் அவரது தாயார் குறித்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.