தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது

(நியூசிலாந்து சிற்சபேசன் )

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), ஈரான் இராணுவம் விரித்துள்ள கண்ணிவெடி வலையில் அந்த நாடே சிக்கித் திணறி வருகிறது. போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், இந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவது ஈரானுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இளைஞனை இழுத்துக்கொண்ட சம்பூர் கடல்

 மூதூர் கிழக்கு, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘சம்பூர் வெளிச்சவீடு’ (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகச் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சோகமான சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் 3:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர் கௌட்

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டின் ’20 வயதுக்குட்பட்டோருக்கான’ (U-20) சாதனையை முறியடித்து, இளம் வீரர் கௌட் கௌட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏப்ரல் 19 பிரார்த்தனை தினமாக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை  (09) அன்று  தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அமெரிக்கா vs ஈரான்.. பாகிஸ்தானில் நடப்பது என்ன?

உலகமே போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. 

ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டுஇ இன்று முதல் ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிஇ ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.