பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு

பூட்டானில் நடைபெறும் விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

வானத்தில் காணாமல் போன தர்ஷினி

1998 செப்டம்பர் 29.
பலாலி விமான நிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி லயன் ஏர் 602 விமானம் புறப்பட்டது.
அந்த Antonov An-24 விமானத்தில் 48 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
விமானம் புறப்பட்ட சுமார் பத்து நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த 55 பேரையும் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி……

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், மாற்று இயக்கங்களை “இந்தியாவின் ரோ (RAW) அமைப்பின் கைக்கூலிகள்” என்று முத்திரைகுத்திவிட்டு, தங்களை மட்டும் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் புலிகளின் அடிவருடிகளுக்குரிய வரலாற்றுப் பாடம் இது.

அனுர அரசாங்கம் கொடுக்கும் கொடூர பரிசு

பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.

மூன்று தசாப்தங்கள் – செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!

30.08.2025 – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும், செல்வி கடத்தப்பட்ட தினமும்!

2021ஆம் ஆண்டு செல்வி குறித்து வெளியான எனது பதிவை திருத்தங்களுடன் மீள்நினைவுபடுத்துகிறேன்…

இந்தப் பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப்போகும் பயன் என்ன? என்று சிந்திப்போரும் இருக்கலாம்.

உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலால் நல்லிணக்கம் மலரும்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சூழலின் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சீனத் தூதுவருக்கும் ​டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang)க்கும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறை

பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (01) அன்று தீர்ப்பளித்துள்ளார்.

இலங்கை குடும்பம் நேபாளத்தில் மாயம்

நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இராஜினாமா

யாழ்ப்பாணம், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.