1989 நவம்பர் 12…
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள்.
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைவர் ரோகண விஜயவீர, கண்டி உலப்பன்ன பகுதியில் உள்ள அவரின் மறைவிடத்தில் இருந்தபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நாள்.

The Formula
நீங்கள் தொண்ணூறுகளில் அல்லது 2008வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்திருந்தால் உங்களுக்குத் தெரியும். அந்தப் பத்துப் பதினைட்டு வருடங்கள் ஈழத்து மக்களின் வாழ்க்கையில் வலிகளும், அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குப் பசுமையான நினைவுகளும் கலந்த ஒரு காலகட்டம் என்று.


வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா பிலோர்ஸ் மீது மூன்றாவது முறையாக விசாரணை நடைபெற்றபோது, மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி, மதுரோவை உடனடியாக விடுதலை செய்யவும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை நிறுத்தவும் கோரியுள்ளனர்.ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதியை சட்டவிரோதமாகக் கடத்தி விசாரணைக்கு உட்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும், இது அமெரிக்காவின் அத்துமீறலான நடவடிக்கை என்றும் போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,அமெரிக்காவின் அத்துமீறல்களையும் தன் சொந்த நாட்டு மக்களே ஏற்க மறுத்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தில், குறைந்த நீர்ப்பீத்தம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டதால் ஓடும் நீர் முற்றிலும் நின்றுபோனது.இதனால், விமான நிலையம் முழுவதும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கழிவறைகளில் தண்ணீரை வெளியேற்றும் வசதி (Flushing) மற்றும் கை கழுவும் வசதி இல்லை.குடிநீர்க் குழாய்கள் (Water fountains) செயல்படவில்லை.உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் (Cafes) காபி மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படவில்லை.