ஐரோப்பாவை உருக்கும் வெப்ப அலை: உருகும் சமிக்ஞை விளக்குகள்

இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்ப அலை, மக்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது, பொது உள்கட்டமைப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்

ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில் வெப்பநிலை 41.5 டிகிரி செல்ஸியஸை எட்டிப் பதிவாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை: IMF முக்கிய அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான குழுவினர், இலங்கையுடனான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர்.

ஜேர்மனியை வீழ்த்திய கொண்டாட்டம்: பராகுவேயில் தேசிய விடுமுறை

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், 4 முறை உலக சம்பியனான ஜேர்மனியை பெனால்யில் அவுட்டில் வீழ்த்தி பராகுவே இமாலய சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி சன்டியாகோ பெனா செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய தேசிய விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

NLB முன்னாள் தலைவர் சியாமளா கைது

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் தலைவரான சியாமளா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்

அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

உணவு உலகில் புதிய டிரெண்டாகும் ’ஊபே’

லட்டே (Lattes) மற்றும் கேக்குகள் முதல் ஐஸ்கிரீம் வரை, ‘ஊபே’ (Ube) அதன் துடிப்பான ஊதா நிறத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டுச் சர்க்கரைவள்ளிக் கிழங்கான இது, ‘மட்சா’ (Matcha) தேநீருக்கு அடுத்தபடியாகப் பெரும் உணவுப் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் சில எதிர்மறையான பக்கங்களும் உள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பனிமூட்டம் காரணமாக வீதியின் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாகக் காணப்படுவதால், விபத்துகளைத் தவிர்க்கப் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

  • வாகனத்தின் முகப்பு விளக்குகளை (Low beam) ஒளிரவிட்டுச் செல்லுங்கள்.
  • வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பேணுங்கள்.
  • வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மூடுபனி விளக்குகளை (Fog lights) பயன்படுத்துங்கள்.
  • தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், பயணத்தின் போது கூடுதல் கவனத்துடன் வாகனத்தைச் செலுத்துங்கள்.

ஷியாமாவின் கொலையாளி காதலன் கள்ளக் காதலியுடன் சிக்கியது எப்படி

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை மருத்துவர் (Physiotherapist) ஷியாமா தர்ஷனி என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர், தனது கள்ளக்காதலி மற்றும் நான்கு வயது குழந்தையுடனும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, யாழ்ப்பாணத்தில் வைத்து புதன்கிழமை (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.