டில்லியை தாக்கிய புழுதிப் புயல்

டில்லியின் பல்வேறு பகுதியில் நேற்று பிற்பகல் வானிலை மாற்றம் ஏற்பட்டு, புழுதிப் புயல் தாக்கியது. இதனால் வீதிகள் கண்ணுக்கு தெரியாத வகையில் புழுதி மூட்டம் படர்ந்தது.

’காக்ரோச்’ கட்சி தலைவர் மீது தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா’ (CJP) கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று ‘இலவசக் கல்வியின் தந்தை’ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர முழங்கினார். ஆனால், அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், இந்த உரிமை இன்று அடியோடு சிதைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“தொழிலாளர்களை பழிவாங்க முடியாது”

“சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது” என்ற முழக்கத்துடன், புஸ்சலாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் அட்டமஸ்தானாதிபதி டி.என்.ஏ பரிசோதனை

சிறுமி ஒருவரைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி,   பல்லேகம ஹேமரத்தன தேரர், டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்காக நிட்டம்புவ காவல்துறையினரால் இன்று (16) கொழும்பில் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பதறினார் கோட்டா: கைது செய்ய வேண்டாமென நீதிமன்றில் மனுத்தாக்கல்

 உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து கட்டளையை பிறப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் பொறுப்பிலக்கியத் தலைவர் மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம்

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தரகராக செயல்பட்ட இஷாரா

பாதாள உலக குழுவின் தலைவனான ‘கெஹெல்பத்தர பத்மே’ போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் ஊடாக வெள்ளைப் பணமாக (நித்தியானுகூலமான பணம்) மாற்றியமைத்த சட்டவிரோத நெட்வொர்க்கின் பிரதான பெண் ஏஜென்ட்டாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள ‘இஷாரா செவ்வந்தி’ செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது..

அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் மனிதத்தோடு உதவியிருந்தாலும்..குறிப்பாக மெத்தை கடை வைத்திருக்கும் ரியாசுதீன் மன்சூரியும் அவரது மகன் அர்மானும் உடனடியாகச் செயல்பட்டனர்.

’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி

தனது கணவன், எந்தவொரு தப்பும் செய்யாத நிரபராதி என்றும், அநீதியான முறையில் ஒரு “பலிக்கடா” ஆகப் பயன்படுத்தப்படுகிறார் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே தெரிவித்தார்.