மேற்கத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைக்கும் கடுமையான ஆரம்பகால கோடை வெப்ப அலையினால், பிரான்சில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் மே மாதத்திற்கான தங்களது அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளன. மேலும், செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கிவ்வை விட்டு வெளியேற வெளிநாட்டவர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை
ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகளை வீசிக் கொண்டிருந்த ஈரான் இராணுவ படகுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
50 % ஊதியக் குறைப்பை எடுத்துக் கொள்ளும் ஜனாதிபதி
பொலிவிய ஜனாதிபதி றொட்றிகோ பஸ்ஸின் இராஜினாமாவைக் கோரும் ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனதும் தனது அமைச்சரவை அமைச்சர்களதும் ஊதியத்தை அரைவாசியாகக் குறைக்கப் போவதாக ஜனாதிபதி பஸ் தெரிவித்துள்ளார்.
8.75 சதவீதம் வட்டி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
“அநுராதபுரத்தில் இதெல்லாம் சாதாரணமாம்!
” பிரிட்டன் இளவரசருக்கே சிறை; இலங்கையில் பிக்குவிற்கு விசேட சலுகையா? கூச்சமின்றி வாதிடும் சட்டத்தரணிகள்!அமெரிக்காவில் சிறுமி ஒருவருடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசரே அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சர்வதேசச் சம்பவங்கள் உலகிற்குச் சட்டத்தின் வலிமையை உணர்த்தியிருந்தன.

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
Sinthanai Selvan அவர்களுக்கு மிக்க நன்றி
மேனாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் பதிவு
தொலைக்காட்சியில் விஜய் அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விரியும் எனது பொதுவாழ்வில் குறைந்தது இருபத்தைந்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பேன் பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் இரண்டு, மூன்று முறைகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அல்லது அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். பொதுமக்களுக்கும், அரசியல் வட்டாரங்களிலும் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பார்கள்.


