மன்னாரில் அதிரடி: 3 அரச நிறுவனங்கள் மீது வழக்குத் தாக்கல்

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்புச் செயல் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருமணப் பதிவுகள்: கடந்த 15 ஆண்டுகளில் 28% சரிவு

இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

காணி விடுவிப்பை வலியுறுத்தி பலாலியில் தொடரும் போராட்டம்

வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில்    ஞாயிற்றுக்கிழமை(19) அன்று ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் நாட்டு புதிய அரசியல் கலாச்சாரம்

(Panner Selvam)
அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராகிறார், கலைஞர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலி தலைமை செயலகத்தின் வெளியில் எடுத்து வீசப்பட்டு உடைக்கப்படுகிறது.

பெலோனியா, தெற்கு திரிபுரா

தியாகி பாதல் ஷிலுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நாளில், நூற்றுக்கணக்கான சிபிஐ(எம்) தோழர்கள் இன்று திரிபுரா போலீசாருடன் நேரடியாக மோதி, அவர்கள் அமைத்திருந்த பல்வேறு தடுப்புகளைத் தகர்த்து முன்னேறினர்.

தங்கம் அடகு வைப்பு அதிகரிப்பு

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்படும் கடன்களின் அளவு சுமார் 35,145 கோடி ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். இது சதவீத அடிப்படையில் சுமார் 54 சதவீத அதிகரிப்பாகும்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் ரோபோடிக்ஸ் புரட்சி

பெருந்தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறன்களை வளர்க்கும் நோக்கில், மூன்று நாள் ரோபோடிக்ஸ் செயன்முறைப் பயிற்சி மற்றும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தியா – இலங்கை வரி உடன்படிக்கை மாற்றம்

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையில் (DTAA) இந்தியா முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் வரிச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் ‘டிரீட்டி ஷாப்பிங்’ (Treaty-shopping) போன்ற முறைகேடுகளைத் தடுத்து, வருவாய் இழப்பைக் குறைப்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக்

(Indran Rajendran)

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP ) இளைஞர்களுக்கு ஆதரவாக
நீட் தேர்வு முறைகேடு, யுஜிசி குளறுபடி போன்ற கல்வி கேடுகளுக்கு எதிராக ஜூன்28 லிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக் ( Sonam Wangchuk) எனும் முக்கியமான சூழல் செயல்பாட்டாளரின் உடல்நலம் ஆபத்தை எதிர் நோக்குகிறது.