13ஆவது வாரமாக தொடரும் காணி உரிமைப் போராட்டம்

வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளித்து, சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, காணி இழந்த மக்கள் இன்று 13ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

’FitsAir’ கொழும்பு – டுபாய் விமான சேவை தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, ‘FitsAir’ விமான நிறுவனம் தனது கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

முதலமைச்சர் விஜய் உடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த த்ரிஷா

பிரிட்டனில் நடைபெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நடிகர் அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா பேசிக் கொண்டுதான் இருப்பார்….!

(தோழர் சாகரன்)

36 இல் பிறந்து 26 இல் எமது மனங்களில் நீங்கா இடம் பெற்று தனது 90 வயதில் இயற்கை எய்தி உள்ளார் சாலமன் பாப்பையா.

அவரது வாழ்க்கைத் துணைவியார் ஜெயா பாய் தனது 88 வயதில் ஜனவரி 2025 ம் ஆண்டு காலமானார். அவரின் இழப்பு ஐயாவின் மூப்பை மேலும் வருத்தியது எனலாம்.

தேசிய மீலாத் தினமும் தீராத ஆடை விவகாரமும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிற்றூழியர்களாகப் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், சட்டப்படியான சீருடைக்கு மேலதிகமாக, முகத்தை மூடாத விதத்தில் ஹிஜாப் மற்றும் நீளக் காற்சட்டை அணிய அனுமதி கோரிய முஸ்லிம் யுவதிகளுக்கு அந்த உரிமை அவ்வைத்தியசாலையில் மறுக்கப்பட்டதை நாடறியும்.

பேரிடரே பேரிடராக மாறுகிறது

திபெத்திய பீடபூமிக்குக் கீழே அமைந்துள்ள நேபாளத்தில், பேரிடர் தயார்படுத்தல் தொடர்பில் ஒரு பெரும் குருட்டுப் புள்ளி காணப்படுகிறது. ஆற்றின் மேற்பகுதியில் ஏற்படும் பேரிடரே கீழ்ப்பகுதியிலும் பேரிடராக மாறுகிறது. எவ்வாறாயினும், நேபாளத்தின் வெள்ளத் தயார்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இரண்டு போட்டே கோசிகளும் (Bhote Kosis), கர்வாலியும் அல்லது அருணும் நேபாளத்திற்கு உள்ளே நுழைந்த பின்னரே தொடங்குகின்றன.

பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று வௌ்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியேறினார் கோட்டாபய

மிக்ச் (MiG) போர் விமானங்களின் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) பல மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 25 பெண் கைதிகள் பெயர் குறிப்பிட்டனர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த 25 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.