த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

The Formula
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிப் பேரவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு வியாழக்கிழமை (10) தீர்மானித்தது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு கூடியபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாதுகாப்பு ஆய்வு முயற்சியான ‘வஸ்பார்’ செயற்திட்டத்தின் நல்லூர் 2026 கண்காட்சியின் நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை (05.09.2026), “கோவில், குளம், காடு, கமம்” என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டடக்கலைத் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட உரையாடல் வட்டம் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிப்பதுடன், கொழும்பிலுள்ள இந்திய வம்சாவழியினரையும் சந்தித்து உரையாடுவார். அவர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை வழிநடத்துவார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனியில் முதல்முறையாக அதி வலதுசாரி மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாசாக்கற்ற, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கட்சியான ‘மாற்றுக்கான ஜெர்மனி’ (Alternative für Deutschland – AfD) கட்சி, முக்கியமான மாநிலத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், அக்கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.