விஜய் தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

22 தொடர்பில் செப்டம்பர் 24, 25 ஆம் திகதிகளில் விவாதம்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிப் பேரவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு வியாழக்கிழமை (10) தீர்மானித்தது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு   கூடியபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

ஜனாதிபதி அனுரவுக்கு டக்ளஸ் அவசர கடிதம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பினார் ஸெலென்ஸ்கி

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சென்ற விமானம் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பியதாக நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்தோர் கூறியிருக்கிறார்.

எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது

செப்டம்பர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கப்படவுள்ள எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

ஞானசாரருக்கு வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பேணுவதற்கு மக்கள் இயக்கம் அவசியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாதுகாப்பு ஆய்வு முயற்சியான ‘வஸ்பார்’ செயற்திட்டத்தின் நல்லூர் 2026 கண்காட்சியின் நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை (05.09.2026), “கோவில், குளம், காடு, கமம்” என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டடக்கலைத் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட உரையாடல் வட்டம் இடம்பெற்றது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வந்தடைந்தார்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிப்பதுடன், கொழும்பிலுள்ள இந்திய வம்சாவழியினரையும் சந்தித்து உரையாடுவார். அவர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை வழிநடத்துவார்.

நோர்வூட் அஸ்வெசும மோசடி: ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

ஜேர்மனி மாநிலத் தேர்தல்: AfD வெற்றி

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனியில் முதல்முறையாக அதி வலதுசாரி மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாசாக்கற்ற, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கட்சியான ‘மாற்றுக்கான ஜெர்மனி’ (Alternative für Deutschland – AfD) கட்சி, முக்கியமான மாநிலத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், அக்கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.