உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பலமான (அரசியலமைப்புச்) சரத்தையும் திருத்துவதைக் கோரவில்லை என்பதால், அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பின் ஒப்புதல் தேவையில்லை என்று சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாலா தம்பு: தொழிலாளர்களுக்காக அறுபத்தாறு ஆண்டுகள் ஒலித்த குரல்
ஒரே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அறுபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய ஒருவரை உலகத் தொழிற்சங்க வரலாற்றிலேயே காண்பது அரிது. அந்தச் சாதனைக்குரியவர் இலங்கையின் பாலா தம்பு. 1948-ஆம் ஆண்டு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014-ஆம் ஆண்டு தனது 92-ஆவது வயதில் மறையும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு
வானத்தில் காணாமல் போன தர்ஷினி
1998 செப்டம்பர் 29.
பலாலி விமான நிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி லயன் ஏர் 602 விமானம் புறப்பட்டது.
அந்த Antonov An-24 விமானத்தில் 48 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
விமானம் புறப்பட்ட சுமார் பத்து நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த 55 பேரையும் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி……
1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், மாற்று இயக்கங்களை “இந்தியாவின் ரோ (RAW) அமைப்பின் கைக்கூலிகள்” என்று முத்திரைகுத்திவிட்டு, தங்களை மட்டும் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் புலிகளின் அடிவருடிகளுக்குரிய வரலாற்றுப் பாடம் இது.
அனுர அரசாங்கம் கொடுக்கும் கொடூர பரிசு
பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
மூன்று தசாப்தங்கள் – செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!
30.08.2025 – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும், செல்வி கடத்தப்பட்ட தினமும்!
2021ஆம் ஆண்டு செல்வி குறித்து வெளியான எனது பதிவை திருத்தங்களுடன் மீள்நினைவுபடுத்துகிறேன்…
இந்தப் பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப்போகும் பயன் என்ன? என்று சிந்திப்போரும் இருக்கலாம்.
உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலால் நல்லிணக்கம் மலரும்
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சூழலின் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சீனத் தூதுவருக்கும் டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு
முன்னாள் அமைச்சருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறை
பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (01) அன்று தீர்ப்பளித்துள்ளார்.
