அனல்காற்றில் 19 பேர் மரணம்

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார். கடும் வெப்பத்தால் 19 பேர் மாண்டுள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலும் மின் – கடவுச்சீட்டு (e-Passports)

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மீண்டும் ஆரம்பமானது விமான சேவை

இடையிலான விமானப் போக்குவரத்து இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பபட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமானப் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், தற்போது போர்ச் சூழல் ஒரு அளவுக்குத் தணிவடைந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பில் திடீர் மாற்றம்

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை- இந்தியா 350 மில். டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தங்களைப் பரிமாற்றம்

‘டித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாய் (INR) மதிப்பிலான கடன் கோடுகளுக்கான (Lines of Credit) ஒப்பந்தங்கள்   இலங்கை மற்றும் இந்தியா இடையே புதன்கிழமை (05) அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?

(வி. சிவலிங்கம்)

ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள பகிரங்க கடிதம் (06-08-2026) தமிழ் அரசியலை மிகவும் குழப்பத்தில் தள்ளுவதாகவும், ஏற்படக்கூடிய குறைந்தபட்ச ஒற்றுமை முயற்சிகளையும் சிதைப்பதாகவும் உள்ளது. 

தமிழ் நாடு பட்ஜெட்

(Bhaskaran Sankaralingam)

பத்திரிக்கை செய்தி 05/08/2026
திரு. விஜய் அவர்களின் தமிழக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று கூறுவதைவிட, மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட் என்றே எமது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.கே) கருதுகிறது.

உதய நிதியின் பேச்சு

(Navaratnam Giritharan)

‘எங்கு தண்ணி வருதோ இல்லையோ அங்கு தண்ணி வரனும்’ – இதுதான் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசப் பேச்சாம். இதுவரை தமிழகத்தில் தற்குறி வாக்காளர்கள் இருந்தார்கள் என்று பார்த்தால் இந்தச் சம்பவம் தற்குறி ஊடகவியலாளர்கள், தற்குறிக் காவல் துறையினரும் இருக்கின்றார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வசனங்களைக் குறிப்பிட்ட மறு கணமே அடுத்து அவர் கூறியது ‘ காவிரியைச் சொன்னேன்’.

நுவரெலியாவில் 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 6 பேரை காணவில்லை

நுவரெலியா மாவட்டத்தில் நீடிக்கும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.