அமெரிக்காவுக்கு கியூபா ஜனாதிபதி எச்சரிக்கை

கியூபா ஒரு அமைதியான நாடு, ஆனால் அமெரிக்கா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கைப்பற்ற மஹிந்த வகுத்துள்ள திட்டம்!

இந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய திட்டம் ஒன்று உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்  வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க  நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

CPL கிரிக்கெட் போட்டியும் , விளையாட்டரங்கு திறப்பும்

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் கண்ணகி விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ திறப்பு விழாவும், செட்டிபாளையம் பிரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் கடந்த வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

உள் விவகாரங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்ப்போம் – சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசுவதைத் சித்திரை புத்தாண்டிலிருந்து தவிர்க்க வேண்டும் என்ற திடசங்கற்பத்தை அனைவரும் எடுக்க வேண்டும் எனத் தமிழின நலன் கருதி அக்கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அன்புரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண ஆட்சிக் கூடாரத்தில் குடியேறும் கிராம ராஜ்யம்

(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

பாராளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது தராவிட்டால் வேறெதனையும் ஏற்கவும் மாட்டோம் – கேட்கவும் மாட்டோம் என 1948 வரை இலங்கைத் தமிழர் மத்தியில் மேலாதிக்கம் செலுத்திய தலைப்பா கட்டிய மேட்டுக்குடி அரசியல் திரு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் பயணித்தது.

நிலக்கரி முறைக்கேடு: ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முழு அதிகாரமுடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது முதல் 2026 ஏப்ரல் 16 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது’

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.எம்.எப். பாராட்டு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 வசந்தகாலக் கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவினர் மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.