’டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்’

உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் அவரது இல்லத்தில் இன்று தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பாக்யராஜ் மரணமடைந்தார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

கல்பிட்டியவிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதேவேளை கடற்றொழிலாளர்களையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வியல் சாதிய அடையாளம்

(Kanniappan Elangovan)

யாராவது ஒரு நடிகர் , தயாரிப்பாளர் அல்லது திரைத்துறை கலைஞரிடம் சொன்னால் மட்டுமே சி. ஜோசப் விஜய் எனும் முதல்வரிடம் கருத்து சொல்ல இயலும் என்கிற நிலை. கூட்டணி இல்லாத ஆதரவு கட்சிகளோ, கூட்டணியில் சேர்ந்து அமைச்சரான கட்சிகளோ கூட முதல்வரை சந்திக்க இயலாத நிலை. பள்ளிக்கல்வியல் சாதிய அடையாளத்தைப் புகுத்த முதல்வர் ஆணையிட்டார் என செங்கோட்டையன் அறிவிக்கிறார்.

வெனிசுலா நிலநடுக்கம்

வெனிசுலா நிலநடுக்கங்களில் குறைந்தது 235 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் படையினர் இடிபாடுகளில் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.தற்போதைய செய்திவெனிசுலாவின் தலைநகருக்கு அருகே ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 235 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

PTA தொடர்பில்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள், அதாவது இன்னும் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சுரேஷ் சலே விவகாரம்: போப்பிடம் உறவினர்கள் கோரிக்கை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் தலையீடு செய்யுமாறு போப் ஆண்டவர் பதினான்காம் லியோவிடம் (Pope Leo XIV) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனம் சார்பில், நெல்லுக்கான நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை (23) அன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

பாமகவின் நீண்டகாலப் போர் ஓய்ந்தது

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான கருத்து வேறுபாடுகள், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளதாகத் தைலாபுரத் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாவின் மனு ஒத்திவைப்பு

2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான மேலதிக விசாரணை, ஜூலை 6-ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.