இன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் பாரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்த ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

·பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்

(Sanjeevan Thurainayagam)

smart

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது.

யாலவில் கஞ்சா ​சேனை ; சுற்றிவளைத்த ட்ரோன்

தணமல்வில பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தணமல்வில பொலிஸாரும் களுத்துறை விமானப்படை முகாமின் UAV (ட்ரோன்) பிரிவினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) யால காப்பகப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.

CIABOCவில் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (28) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

பொகவந்தலாவில் கையெழுத்து வேட்டை

ஹட்டன் நகரில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை மீண்டும் நோர்வூட் பகுதிக்கே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, ‘மலையக அரசியல் அரங்கம்’ கட்சியினால் திங்கட்கிழமை (27) அன்று பொகவந்தலாவ நகரில் கையெழுத்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கைதி மரணம் தொடர்பில் நடவடிக்கை

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஜெயிலர் ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாச்சிமார் ஆலயத்திலிருந்து இராணுவம் வெளியேறியது

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

‘அமைதி நடைப்பயணம்’: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அமைதி நடைப்பயணம்’ (Walk for Peace Program Sri Lanka) நாளை, 2026.04.28 அன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில் கொழும்பு-07, சுதந்திர சதுக்கப் வளாகத்தில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹட்டனில் பதற்றம் ; வாயில் பிளாஸ்டருடன் உறுப்பினர் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாதாந்த அமர்வு,  கடுமையான பதற்ற நிலையை எட்டியது.  கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் சபை அறிக்கை (Minutes) தொடர்பான சர்ச்சை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான அமர்வே மீண்டும் நடத்தப்பட்டுள்ளது.