பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் விலை உயர்வு: கிராமப்புற பெண்கள் பெரும் பாதிப்பு

வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் (Sanitary products) விலை உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

61 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 கோடி ரூபாய் குஷ்ஷுடன் மைத்துனர்கள் கைது

டி.கே.ஜி.கபில ரூபாய் நான்கு கோடியே பத்து இலட்சத்து எண்பதினாயிரம் (ரூ. 41,080,000) பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்குள் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், இன்று (05/30) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகின

புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் ‘பொருந்தும் அத்தியாவசிய சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு

இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கத்திரி வெயில்: பிரான்சில் 7 பேர் பலி

மேற்கத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைக்கும் கடுமையான ஆரம்பகால கோடை வெப்ப அலையினால், பிரான்சில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகள் மே மாதத்திற்கான தங்களது அதிகபட்ச வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளன. மேலும், செவ்வாய்க்கிழமையன்று வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கிவ்வை விட்டு வெளியேற வெளிநாட்டவர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரேனியத் தலைநகர் கிவ்விலுள்ள இராணுவத் தளவாட தொழிற்சாலைகள் மீது தொடர்ச்சியான திட்டமிட்ட தாக்குதல்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்த ரஷ்யா, வெளிநாட்டுப் பிரஜைகளை கிவ்வை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு

ஈ​ரான் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்டுள்ளன. ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள இராணுவ நிலைகளைக் குறி​வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. குறிப்​பாக ஈரானின் முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​ணிவெடிகளை வீசிக் கொண்​டிருந்த ஈரான் இராணுவ படகு​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்ளது. 

50 % ஊதியக் குறைப்பை எடுத்துக் கொள்ளும் ஜனாதிபதி

பொலிவிய ஜனாதிபதி றொட்றிகோ பஸ்ஸின் இராஜினாமாவைக் கோரும் ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனதும் தனது அமைச்சரவை அமைச்சர்களதும் ஊதியத்தை அரைவாசியாகக் குறைக்கப் போவதாக ஜனாதிபதி பஸ் தெரிவித்துள்ளார்.

8.75 சதவீதம் வட்டி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை  (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.