பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள், அதாவது இன்னும் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
சுரேஷ் சலே விவகாரம்: போப்பிடம் உறவினர்கள் கோரிக்கை
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் தலையீடு செய்யுமாறு போப் ஆண்டவர் பதினான்காம் லியோவிடம் (Pope Leo XIV) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிக்கு இறங்கிய விவசாயிகள்
பாமகவின் நீண்டகாலப் போர் ஓய்ந்தது
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான கருத்து வேறுபாடுகள், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளதாகத் தைலாபுரத் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாவின் மனு ஒத்திவைப்பு
2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான மேலதிக விசாரணை, ஜூலை 6-ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெண் பிசியோதெரபிஸ்ட் படுகொலை: சந்தேகநபர் மனைவியுடன் யாழில் கைது
நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவரைப் படுகொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மற்றும் அவரது சட்டப்பூர்வ மனைவி ஆகியோரை, யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். இது குறித்து நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் நட்பு
(Chandramowleeswaran Viswanathan)
என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒருவர் 50 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் பணி செய்கிறார்.பேஸ்புக்கில் நட்புடன் பலருடன் பழகுகின்றவர் பல்வேறு விஷயங்களில் கமெண்ட் என்று கலகலப்பாக இருப்பவர் பேஸ்புக் மூலம் 40 வயது பெண்மணி ஒருவருடன் அறிவு பூர்வமான நட்பு உருவாகி இருக்கிறது.

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்
குளிரூட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களுக்குத் தடை
2027 முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றறிக்கை
அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகத் தமது கடமைகளை வகிக்கும் பிரதமர், இந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.