(புருஜோத்தமன் தங்கமயில்)

திங்கட்கிழமை (18) இரவு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படகொன்றின் மீது, இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகு மோதியதில், மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்கிற மீனவரே இவ்வாறு உயிரிழந்திருக்கிறார். அவருக்குத் திருமணமாகி, 40 நாள்கள் மட்டுமே ஆகியிருக்கின்றன.