(அ. வரதராஜப்பெருமாள்)

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை பக்க சார்பற்று நேர்மையாக எழுத வேண்டும்- சொல்ல வேண்டும் என்று சொல்லுகிற ஒவ்வொருவரும் தாங்கள் நேரடியாக பங்கு பற்றாத தங்களுக்கு நேரடியாக தெரியாத விடயங்கள் பற்றி குறிப்பிடுகையில் தங்களுக்கு வசதியாக ஏதோ முழுமையாக உண்மைகளைத் தெரிந்த மாதிரி அடித்து விடுகிறார்கள். இப்படியேதான் தமிழர்களின் சொந்த வரலாற்றறிவு இருக்கப் போகிறது. அதற்கேற்ப தான் எதிர்காலமும் இருக்கும்.