வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர்.