சீதாராம் யெச்சூரி: இந்தியாவின் பன்முகத் தன்மை ஒருமைப்பாடு மதச்சார்பின்மை ஜனநாயகப் பண்பு போன்ற அடையாளதின் கூறு


அந்த வகையில் சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்த கம்யூனிட்ஸ் செயற்பாடுகளுக்கான இழப்பு என்பதையும் இந்திய ஜனநாயகத்திற்கு இந்திய மக்களுக்குமான இழப்பாகத்தான் பார்க்க வேண்டும்


ஆனாலும் அவரின் மரணத்தின் பின்பான இடைவெளியாக இருக்குமா என்றால் இல்லை என்பேன்


அதற்கு இன்னொருவர் கட்சியில் இருந்து புதிதாக வருவார் செயற்படுவார்கள் என்பதே இங்கு கம்யூனிஸ்ட் உலகத்தின் சிறப்பு.

ஜோதி பாசு ஈஎம்எஸ் போன்ற தலைவர்களின் மரணத்தின் பின்பு அக்கட்சி இந்திய அரசியலில் தனது ஆணித்தரமாக கருத்தியலை செயற்பாடுகளை கொண்டிருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்வது சிறந்தது


ஆனால் பாஜக வை எதிர்ப்பதில் காங்கிரஸ உடன் நிபந்தனையுடனான புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.


திரிபுரா மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சி இழப்பு என்பது கம்யூனிட்ஸ் களில் பின்டைவாகத்தான் பார்க்க முடியும் இவை சீதாராம் யெச்சூரியின் காலத்திலும் சரி செய்ய முடியவில்லை


அவரின் செயற்பாடுகள் பற்றி பிபிசி இல் கட்டுரையாளர் ஒருவர் எழுதிய விடயத்தில் இருந்த சிலவற்றின் பகுதிகளை இணைக்கின்றேன் அது சீதாராம் யெச்சூரியின பற்றிய புரிதலையும் இந்திய கம்யூனிஸ்ட் இயத்கத்தின் தற்போதையை நிலமையையும் புரிந்து கொள்வதற்கு உதவும்….


அன்பான, அணுகக்கூடிய சீதாராம் யெச்சூரி அரை நூற்றாண்டு காலமாக கம்யூனிஸ்டாக இருந்தபோதும், அவரிடம் வறட்டுக் கோட்பாட்டுப் பிடிவாதம் இருந்ததேயில்லை.


அவர் 1975-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தற்செயலாக, அது இந்திரா காந்தி அவசரநிலையை விதித்தவுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டும் கூட.

தற்போதைய பொதுச் செயலாளர் இருக்கும் சீதாராம் யெச்சூரி. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற 22வது கட்சி மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டார்.


உடல்நலக்குறைவால் அண்மைக் காலமாக மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட அவர் வந்த அவர், செப்டம்பர் 12இ 2024 அன்று தனது 72 வயதில் இயற்கை எய்தினார்.


சீதாராம் யெச்சூரி புலமை மிக்கவர், சிந்தனைமிக்கவர், நன்றாகப் படித்தவர், ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர், புத்தகங்களை எழுதியவர், தொடர்ந்து கருத்துக்களுடன் விவாதித்து மற்றவரையும் விவாதிக்கத் தூண்டியவர். மேலும் அவரை அறிந்த பலர், “அனைவராலும் விரும்பப்படுபவர், நேசிக்கப்படுபவர்,” என்று கூறுகிறார்கள் சமகாலத்து அரசியல்வாதிகள்.


சிறந்த பேச்சாளராகவும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் பலவேளைகளில் வெற்pகளை கண்டவர்.


ஜவர்கல்லால் நேரு பல்கலைக்கழகம் தான் இவரையும் மக்கள் போராளியாக உருவாக்கியது.

1977-இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்றார். ஆப்போது அவர் பொதுக்குழுக் பல கூட்டங்களை நடத்துவார், அவை இரவு வெகுநேரம் தொடரும்
ஒரு திறமையான பேச்சாளராக, அவரால் பார்வையாளர்களின் மனநிலையை உணர முடிந்தது. மேலும் “பார்வையாளர்களை நம்பவைக்கும் வகையில் அவர் சொல்வதை தொடர்ந்து கட்டமைப்பார்.” என்கிறாரார்கள் அவருடன் சமகாலத்தில் பல்கலைக் கழகத்திற் கற்றவர்கள்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக யெச்சூரி இருந்தபோது அதன் பொதுச் செயலாளராக இருந்த இருந்த சி ராஜா மோகன், “சிக்கலான பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன் அவருக்கு இருந்தது. அவர் ஒரு நல்ல அமைப்பாளர்.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வெல்லும் திறன் அவருக்கு இருந்தது,” என்கிறார்.


இந்தியா போன்ற ஏழ்மையான மற்றும் வளரும் நாடுகளில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருக்கக்கூடிய ஒரு கட்சியில் அவர் இருந்தார். ஆனால் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர அக்கட்சி ஏன் அப்படி ஒரு தேசியச் சக்தியாக மாறவில்லை என்பது ஒரு விவாதப்பொருளாகவே உள்ளது.


இது யெச்சூரி காலத்திலும் சாத்தியப்படவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒருங் கிணைவுகள் இதனைச் சாத்தியப்படுத்தி இருக்கலாம் ஆனால் பலவேளைகளில் இது நடைபெறவில்லை.


யெச்சூரி இந்தியாவில் இடதுசாரிகளின் ஒரு முக்கியத் தலைவராக மட்டும் நினைவுகூரப்படமாட்டார், ‘இந்தியா என்ற கருத்துக்கு’ இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட மதச்சார்பற்ற பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் ஒன்றியமாக தொடர்ந்தும் மிளிர்வதற்கு காரணமானவர் என்று கூறுவது மிகையானது அல்ல.


இதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவராகப் பார்க்கப்படுகின்றார்.


அவர் தேசிய அரசியலில், குறிப்பாக 1989-2014 வரையிலான கூட்டணி ஆட்சியின் கால் நூற்றாண்டு காலத்தில், பா.ஜ.க-வுக்கு ஒரு மாற்றினை உருவாக்க முற்பட்ட ஒரு தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.

யெச்சூரி பிளவுகளை இணைத்தவர். மற்ற கட்சிகள், தலைவர்கள் என அனைவரிடமும் அவர் பழகினார். இதனால் அவர் சில நேரங்களில் ‘மற்றொரு ஹர்கின் சிங் சுர்ஜீத் கம்யூனிஸ்ட் தலைவராகவும் பார்க்கப்படுகின்றார்


பஞ்சாபின் புகழ்பெற்ற சுர்ஜீத், 1992 முதல் 2005 வரை, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவரது அரசியல் திறமை மூலம் 1989-இல் அப்போதைய காங்கிரஸின் ஏதேச்சேகாரத்திற்கு எதிராக தேசிய அளவில் ஒரு மாற்றினை உருவாக்க வி.பி.சிங்குக்கு உதவியவர்.


மீண்டும் 1996-இல் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வரவும், 2004-இல் பி.ஜே.பி-யை ஆட்சிக்கு வராமல் செய்யவும் உதவியவர்.


நண்பர்களும் சகாக்களும் ‘சீதா’ என்றழைத்த யெச்சூரி, சுர்ஜீத்தைப் போலவே, 1996-இல் ஐக்கிய முன்னணியை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.


2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும், 2023-இல் உருவாகி 2024 பொதுத்தேர்தலில் களமிறங்கிய ‘இந்தியா’ கூட்டணியையும் ஒன்றாக இணைக்க உதவினார்.


இந்தக் கூட்டணி, பா.ஜ.க-வுக்குக் கடினமான போட்டியை வழங்கி அக்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்தது.


1996 மற்றும் 2004-இல் ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கங்களுக்கான பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை இயற்ற உதவினார்.


1996-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த ‘வரலாற்றுத் தவறை’ பற்றிச் சொன்னார். 1996-இல் இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சியில் ஒருவர் பிரதமராகும் (அது ஜோதி பாசு) வாய்ப்பை அக்கட்சி தவற விட்டதை அவர் எப்போதும் விமர்சனமாகப் பார்த்தவர்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க பெரும்பான்மையைத் திரட்ட முடியாமல் போய், ஆட்சி அமைக்கத் தயாராக இருந்த ஐக்கிய முன்னணியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை பிரதமராகி கூட்டணியை வழிநடத்த அழைத்தனர். கட்சியின் உச்ச மத்தியக் குழு இந்த வாய்ப்பை நிராகரித்தது.

சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் தனது முத்திரையைப் பதித்தார். மக்களவையில் 12 ஆண்டுகளாக அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், தனது தெளிவான உரைகளுக்காக நினைவுகூரப்படுவார்.


பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைப்பை உருவாக்க உதவினார்.


இதனால் அவர் ஓய்வு பெற்றபோது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி-க்களும் யெச்சூரி தொடர்ந்தும் நாடாளு மன்றத்தில் செயலாற்ற வேண்டும் என்று விரும்பினர்.


கட்சியின் ஒழுக்கமான உறுப்பினர் என்ற முறையில், கட்சி முடிவுகளுடன் தனிப்பட்ட முறையில் முரண்பட்டாலும், இறுதியில் கட்சி முடிவுகளுக்கு இணங்கச் சென்றார்.


உதாரணமாக, இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில் மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதை அவர் எதிர்த்தார்.

அவரது சகாவும் மார்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளருமான பிரகாஸ் காரத்துடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே.


காரத் மற்றும் யெச்சூரி, போட்டியாளர்களாக இருப்பினும் ஒத்துழைப்பவர்கள். சுதந்திரத்திற்குப் பிறகான நவீன இந்தியாவை வடிவமைக்க உதவிய பல அரசியல் ஜோடிகளில் இவர்களும் அடங்குவர்.


‘நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி’ — அதுதான் காந்தி குடும்பத்துடனான அவரது உறவு. சோனியா காந்தியும், பின்னர் ராகுல் காந்தியும், இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமான பல விடயங்களில் யெச்சூரியுடன் பல மணிநேர உரையாடல்களை நடத்தியுள்ளனர். ராகுல் இதனை பல இடங்களில் நினைவு கூர்ந்திருக்கிறார்.


மோதி அரசு துவக்க ஆண்டுகளில், வலதுசாரி இந்துக் கட்சி என்ற அடையாளத்துடன் ஒரு பிரதமர் நாட்டை ஆட்சி செய்ய வந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரியைத் தேர்ந்தெடுத்தது.


தேசிய அரசியலோடு தொடர்புடன் இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் மிக விரைவாகவும், கடினமாகவும், தனது ஒப்பற்ற செயல்பாடுக்காக அறியப்பட்ட சீதாராம் யெச்சூரி, அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒரு பொது மேடையில் (இந்தியா கூட்டணி) ஒன்றிணைத்து, பா.ஜ.க தலைமையிலான சக்திகளுக்கு எதிராக ஒரு சவாலை ஏற்படுத்தினார்.


இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க உதவினார், கேமரா முன் இருந்ததைவிட திரைக்குப் பின்னால் அதிகமாக இதனைச் செயற்படுத்தினார்.


இதற்காக இந்திய ஜனநாயகத்தில் யெச்சூரி என்றும் நினைவுகூரப்படுவார்.


எனவே, அவரது கட்சியின் தோழர்கள் தங்கள் நீண்ட காலத் தாழருக்கு விடைகொடுக்கும்போது, நாட்டின் ஒருமைப்பாடு ஜனநாயக, மதச்சார்பற்ற பன்முகத்தன்மைகளை நிலைநிறுத்த தனது ஆயள் பூராகவும் போராடிய தோழனை நினைவு கூரும்


அவர்களுடன் சர்வதேசத்து கம்யூனிஸ்ட்களும் இணைந்தே கொள்வர்
இந்தியாவின் ஜனநாயகப் பண்புகளை உலகம் முன் உதாரணங்களாக கொள்வதற்கு உங்களைப் போன்ற தலைவர்களின் செயற்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன


சம காலத்தில் உங்களின் கருத்தியலுடன் இணைந்து பயணித்ததை நாம் நிச்சயமாக பெருமைப்படக் கூடியதாக வாய்ப்பாக கொள்ளலாம்.
தோழருக்க எமது புரட்சிகர செவ் வணக்கங்கள்

(நன்றி: நீரஜா சௌதரி)

Leave a Reply