மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் அரசியலுக்குள் நுழையும் பலரும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு குறுகிய காலத்தில் உரிமையாளர்கள் ஆகிவிடுகின்றனர். மிக இலகுவாக, நிதியைக் கொள்ளையடித்து, இலஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டே சொத்துக்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவையெல்லாம், ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.