அகழ்வாய்வு பணிகளின் நிறைவில் 47 மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள், அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.