இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது: ரணில்

மேலும் , எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ​

பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு  என்பவற்றுக்கு சலுகை பெற முடியும் எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை  துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதாக  சிலர் கூறினாலும்  அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை  துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதாக  சிலர் கூறினாலும்  அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.-