இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் இன்று

விழாவில், முப்படை வீரர்கள், துணை இராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்ததோடு, இராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்ற விழா உற்சாகமாக நடந்தன. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.

இந்நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். “ஜெய் ஹிந்த்” என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த அதே சமயம், அவர் புதுடெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது