இனி போட்டியிடேன்: பந்துல

இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் தன்னால் இயன்றவரை மக்களுக்காக உழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம பிரதேசத்தை மக்களின் அறிவு மையமாக அல்லது பிரக்ஞை பண்டு நகராக மாற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில வருடங்களில் மீண்டும் டாக்டர் பட்டம் படித்து திரைப்படம் எடுக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Leave a Reply