வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
