“உக்ரேனில் அமைதி திரும்பாது”

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரேனைக் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின்,  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “உக்ரேனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது” என தெரிவித்தார்.

ஜனாதிபதியாக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.