உதயமானது புதிய கூட்டணி

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்சிகள் இணைந்து உருவாக்கிய “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இன்று (05) காலை நடைபெற்றது. இந்த கூட்டியின் சின்னம் “கிண்ணம்” என அறிவிக்கப்பட்டு  “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” உத்தியோகப்பூர்மாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.