கவனயீர்ப்பு போராட்டம்

குறிப்பாக  “மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக  நீதியை பெற்றுத் தாருங்கள்,  பல அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் பல மேய்ச்சல் தரைகள், கடற்கரையோரம், காட்டு நிலங்கள் போன்றன பணக்காரர்களுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. அதனை விரைந்து தடுத்து நிறுத்தவும்.

மணல் வளம்  பல வசதி படைத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளால் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் கடல் வளம் முறையற்ற நிலையில் அழிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்திய டோலர் படகுகள் எமது மீனவர்களின் வியாபாரத்தைச் சிதைக்கின்றனர்.

கடற்றொழில் அமைச்சானது தெற்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதிலும் வடக்கு மீனவர்கள் மிகவும் ஒடுக்கப் படுகின்றார்கள்.” என குற்றச்சாட்டினர்.

இந்நிலை மாற வேண்டுமெனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரியத் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.