காரைதீவை உலுக்கும் தொடர் சோகம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.தக்சிதன் தமது குடும்பத்துடன் உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறிவீழ்ந்த காரணத்தினால் இம் மரணம் சம்பவித்திருக்கின்றது .

இவருக்கு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் இ.மிதுரன் எனும் சகோதரனும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் பயிலும், நிஷாகரி எனும் சகோதரியும் உள்ளனர்.

அன்னாரின் பூதவுடல் பானம வைத்திய சாலையில் வைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நற்பிட்டிமுனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது அகால மரணம் மீண்டும் காரைதீவை சோகமயமாக்கியுள்ளது.