“கிராமத்துக்கு தவறாமல் வரும் ஆபத்தான விலங்கு”

கண்டி, பதியபெலெல்ல நுகாய பிரதேசத்தில் சிறுத்தைப் புலியொன்று நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமத்தின் மேல் உள்ள காப்புக்காடு பகுதியில் இருந்து மாலை நேரத்தில் கிராமத்திற்கு வரம் பெரிய சிறுத்தைப் புலி கடந்த சில நாட்களாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பது வழக்கமாகிவிட்டது. மான் போன்ற விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் கிராம மக்கள் பார்த்துள்ளனர்.