கூட்டமாக வெளியேறும் பலஸ்தீனிய மக்கள்

பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் ஐ.நா. உயர்மட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இஸ்ரேலியப் படைகள் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளதால் உலகளவில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஃபா நகரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, கான் யூனிஸ் நகரில் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலும் அவர்கள் குடும்பத்தினருடன் வாகனங்களில் பொருட்களுடன் வெளியேறுகின்றமை காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல், இந்த கொடூரமான தாக்குதலை “ஒரு சோகமான விபத்து” என்று கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், “பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க நாங்கள் முயற்சித்த போதிலும், நடந்த இந்த சம்பவம் எதிர்பாராதது மற்றும் உள்நோக்கம் அற்றது.

இவ்வளவு பெரிய தீ அங்கு பற்றி எரிவதற்கு என்ன காரணம் என்பதை எங்கள் விசாரணையானது கண்டுபிடிக்க முயல்கிறது” என்றுள்ளது. இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.