கென்யாவில் ஆர்ப்பாட்டம்: 23 பேர் உயிரிழப்பு

புதிய வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தும் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய நிதி சட்டமூலத்திற்கு அமைய பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருள்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டமையே கென்ய ஆர்ப்பாட்டத்திற்கான காரணமாகும்.

சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய பதுங்கு குழி வழியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கென்யாவின் நைரோபி நகரில் பல நாள்களாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.