கைகொடுத்தார் ரணில்: கும்பிட்டார் சஜித்

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க, காலை 11  மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். எனினும், வேட்பு மனுக்களை 39 பேர் மட்டுமே தாக்கல் செய்தனர்

அதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தான் அமர்ந்திருந்த  ஆசனத்தில் இருந்து எழும்பி பின்னால் சென்றார்.  அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துவதற்கு கையை நீட்டினார்.

எனினும், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருந்த சஜித் பிரேமதாச கையை கொடுக்காது, கைக்கூப்பி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் செலுத்தினார்.