சமூக நல்லிணக்கத்துக்காக இணைந்த இளைஞர்கள்

கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தில்  உள்ள 08 பிரதேச செயலகங்களில் இருந்து 04 மதங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட இளைஞர் – யுவதிகள் பங்கேற்றனர். 

அம்பாறை மாவட்ட இளைஞர்களை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அன்பாக வரவேற்றதுடன், ஒன்றாக கலந்து சமூக நல்லிணக்கம், வன்முறை, தீவிரவாதம் தவிர்த்தல், வாழ்வியல் பற்றிய விளக்கங்களும் கல்வி அதனுடைய சிறப்பம்சங்களும் இடம்பெற்றதுடன், திறன் விருத்தி சார் உளவியல் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டன.