’’சாதாரண சாரதி வேண்டும்,பைத்தியக்காரன் வேண்டாம்”

இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தனது மோசமான பஸ் பயண அனுபவத்தை பொலன்னறுவை சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார். நாட்டின் அழகைக் காண கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு பேருந்தில் வந்ததாக குறித்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கூறினார்.