தங்கத்துரை, குட்டிமணியின் உடல்களை கேட்கிறார் செல்வம்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம்  அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.