தத்தளிக்கிறது கண்டி

வெல்லவாய – எல்ல பிரதான  வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (16) மாலை 6 மணி முதல் வௌ்ளிக்கிழமை (17) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கரந்தகொல்ல மற்றும் இராவணா எல்ல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் கற்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகிறனர்.

குறித்த பகுதியில் பெய்யும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.