தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி

CCTV காட்சிகளின் படி, சிறுமி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் உறுதிப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது என தெரிவித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply