பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான  பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ஹரேஷ் பரத் மோகன் ராமேஸ்வரம் அடுத்துள்ள சங்குமால் துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (05)  காலை தனது பயிற்சியாளர்கள் மற்றும் மீனவர்கள் என 20  பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.

தலைமன்னாரில் வெள்ளிக்கிழமை இரவு 11.37 மணியளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கி  சனிக்கிழமை பிற்பகல் 11.29 மணி அளவில் 11 மணி நேரம் 52 நிமிடம் ஹரேஷ் பரத் மோகன் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை அடைந்துள்ளார்.