பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி மனு

நவம்பர் 14ஆம் திகதியன்று பாராளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவை எதிர்த்து சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு அமைய வேட்புமனுக்களை கோருவதற்கும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தவறிவிட்டதாகக் கூறி, ‘அபி ஸ்ரீலங்கா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

Leave a Reply