போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை  யாழ். நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதன் பொழுது ஊடகங்களுக்குரிய  போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

குறித்த பயிற்சி பட்டறையில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் அதிகாரிகள் ,யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.