மட்டு. மாவட்டத்தில் அடை மழை

அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகரை, புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, நாவற்குடா, வாகரை, கொக்கொடிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.