மதுபானசாலைக்கு எதிராக சவப்பெட்டி ஆர்ப்பாட்டம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மதுபானசாலைக்கு முன்பாக  திங்கட்கிழமை(30) அன்று சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் அரச அதிபரின் வாக்குறுதிக்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை இ​டைநடுவில் கை விட்டுச் சென்றனர்