மதுபானசாலை அனுமதி விவகாரம்; ‘வெளிப்படையாக வாக்குமூலம் வழங்கவும்’

 குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

“நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். அத்துடன் நான் எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அல்லது எனக்கு தெரிந்த யாருக்கோ, மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன்” குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “யாழ்.மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு வாக்குமூலம் வழங்க முடியுமா என நான் சவால் விடுக்கிறேன்.

“அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply