மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை  (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.