மின் கட்டணத்தை 20% குறைக்க பரிந்துரை

மேலும், மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்திற்கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதாரச் சிரமங்களை ஓரளவு குறைக்க முடியும் எனவும்   கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6,000 கோடி ரூபாய் எனவும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.