முன்னாள் ஜனாதிபதிகளின் தலைமையில் புதிய முன்னணி உதயம்?

இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என, முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் ஏற்கனவே கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.

பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம. அண்மையில் நடத்திய அறிவார்ந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதிகள் பலர் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இது தொடர்பான விடயங்களை முன்வைத்துள்ளனர்.

வாழ்வதற்குரிய சிரமங்கள் தொடர்பான பெரும்பாலான விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகள் அதிகம் என்ற சமூகப் பேச்சு காரணமாகவே அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply