முருகேசு சந்திரகுமார் சஜித்துக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இன்று(02) இடம்பெற்ற விசேட சந்திப்பையடுத்து இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  முருகேசு சந்திரகுமார் இந்த அறிவிப்பை விடுத்தார்.

1994-2000 மற்றும் 2010-2015 காலகட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள இவர், தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து, பாராளுமன்ற தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றி அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியுமாவார். 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.