மூதூர் விபத்தில் 52 யாத்திரிகர்கள் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம்  நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் ஒன்று, இன்று மாலை கெங்கைத்துறை பாலம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.