“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு இணங்க திகதி அறிவிக்கப்படும்,” என்று ஆணைக்குழுத் தலைவர் வலியுறுத்தினார்.
வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை தாக்கலைத் தாமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன, அதே நேரத்தில் அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குரல் கொடுத்து வருகிறது.
முதலில் 2023 இல் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, 2025 தேர்தலுக்கும் அதே வேட்புமனுப் பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன.
புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது.