’ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது’

“சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்லவைக்க வேண்டும். மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித் பிரேமதாச இருப்பார்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும்  இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அயல் நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே. இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம். அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. எமது மக்களின் பிரச்சினைகள் எவற்றையும் அவர் தீர்க்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தந்திரமாக இழுத்தடித்தார்.

சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது. வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர். விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.

பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டார்.