ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

உக்ரைன் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.