வவுனியாவில் 130 கடைகளுக்கு சிவப்பு அறிவித்தல்

இதன் முதற் கட்டமாக 86 கடைகள் கடந்த  புதன்கிழமையும்(05), 44 கடைகள் திங்கட்கிழமையும் (10)  சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன், வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது. 

மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றியமைக்காக  வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதுவரை இந்நடவடிக்கையின் மூலமாக 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு  கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது