வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அந்தவகையில் உதவித்தொகையைப்  பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாகச்  செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் 35,000 டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட தனிநபராகவோ இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021 -ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும், இதற்கு தகுதியுடையவர்கள் பெடரல் அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தாம் வாடகை செலுத்துவதற்கான ஆதாரத்தையும் அதனுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.