விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவன் கைது

சத்தீஸ்கரை சேர்ந்த  நிர்பன் ஃபஸ்லுதீன் (வயது 33) என்பவரும் 17 வயதான சிறுவன் ஒருவருமே, இவ்வாறு கைது செய்யப்படுள்ளதாக, மும்பை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன், கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து, அதன் ஊடாகவே சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்த்திருத்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply