விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி பலி

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் நேற்று காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டப்படி தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியது.

மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர். சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட  8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.