“22” க்கான ஆணியை பிடிங்கி திருப்பி அடித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளிவிட வேண்டாம் என நேற்றைய தினம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால், அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

83 ஆம் ஆக்கத்தின் (b) பந்தியில் காணப்படும் “ஆறு வருடங்களை விட அதிகரிக்காமல்” என்பதை “ஐந்து வருடங்களை விட அதிகரிக்காமல்” என திருத்தியதாக இந்த சட்டமூல அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.