9 ஆவது பாராளுமன்றில் 19 எம்.பிக்கள் மாற்றம்

 இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்ததுடன், இவருக்குப் பதிலாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார். இதேபோன்று, முஜிபுர் ரஹ்மான் இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினராக வஜிர அபேவர்தன  நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் நான்கு தடவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

  மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன.

 2020.08.20 முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும்,

 2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும்,

2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும்,

2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும்,

2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன. 

Leave a Reply