98 சதவீத தபால் மூல வாக்குகள் பதிவு

தற்சமயம் சுமார் 7 லட்சத்துக்கு அதிகமான செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் தற்போது தபால் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளன.
 
விநியோகிக்கப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் செலுத்தப்பட்டு மீளக் கிடைக்கப்பெற்ற வாக்குச்சீட்டு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், 98 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
 
இந்தநிலையில், செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்களை உரிய மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply