(சாகரன்)

புத்தகத்தின் தலைப்பே ஆயிரம் கதை சொல்லும் தலைப்பாக இருக்கின்றது. அது ‘வெந்து தணியாத பூமி’. மிகவும் பொருத்தமான ஒரு சமூகத்தின் அவலங்களை அதற்கான போராட்டங்களை.. எழுச்சிகளை… எடுத்தும் கூறும் தலைப்பு. புத்தகத்தை எழுதியவர் புறநிலையில் இருந்து எழுதாமல் அக நிலையில் இருந்து அந்த மக்களுடன் ஒருவாராக பிறந்து வாழ்ந்து போராடி எழுதிய புத்தகம். அதனால் அது முழுமைக்கு அண்மையான உயிர்புடன் இருப்பதாக உணர முடிகின்றது.