இந்திய எக்சிம் வங்கி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் இலங்கை திறைசேரியுடன் பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என, நேற்று (31) வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
கடுமையாக உயர்ந்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 1,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 613,478 ஆக அதிகரித்துள்ளது.
அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம் சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது.
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுமையாக அதிகரித்தன மரணங்கள், தொற்று. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.