
Month: April 2023
இராஜராஜ சோழனும் ஸாஜகானும்
தஞ்சாவூர் பெரியகோவில்
மழையால் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு
காலநிலை மாற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) காலை முதல் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பெய்த மழைக் காரணமாக பார்க் தோட்டத்திலிருந்து கந்தப்பளை கல்பாலம் வரை பெருக்கெடுத்து ஓடும் பாம்பன் ஆற்று நீர் விவசாய காணிகள்,மற்றும் வீடுகளுக்கு உட்புகுந்த நிலையில் மரக்கறி பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியது.அதேநேரத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான மக்களுக்கு வழங்குங்கள்
புதிய வரி திருத்தத்துக்கு எதிராக பரவலாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அறிமுகப்படுத்திய வரியை மீளப்பெறவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நமது நாட்டில் பணம்படைத்தவர்கள், ஏழைகள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.
பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி
சூடானில் இருந்து 14 பேர் நாட்டுக்கு வருகை
சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.